ஆவணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ் வழியில் பொறியியல் பட்டப்படிப்பு- வரும் கல்வியாண்டில் அறிமுகம்

தமிழகத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் [^] பொன்முடி அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக கட்டுமான பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இயந்திர பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள நான்கு அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் 14 கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்புகள் அறிமுகமாகின்றன. 

இதற்காக வரும் கல்வியாண்டில், இந்த குறிப்பிட்ட கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 800 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் [^], தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும் ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது.

பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான பாடத் திட்டங்கள், கலைச்சொல் உருவாக்கம் என இதற்கான பல்வேறு பணிகளும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

முதல்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்புக்கு தேவையான தமிழ் வழி பாடத்திட்டங்கள் மற்றும் கலைச்சொற்களை வடிவமைக்கப்பட்டு, பாடங்கள் நடத்த தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று சென்னை [^] தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன், உயர்கல்வி ஆணையத்தின் துணைத்தலைவர் ராமசாமி மற்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் [^] நடந்தது.

இக்கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 'தமிழ் வழியில் பொறியியல் பட்டபடிப்பை நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் கட்டுமான பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் பட்டப்படிப்புகள் தமிழ் வழி நடத்தப்படும்' என அறிவித்தார்.

மேலும், அண்ணா பல்லைக்கழகம் மற்றும் உருப்புக்கல்லூரிகளில் மட்டுமல்லாது, அகில இந்திய கல்வி ஆணையத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் பட்டபடிப்பு பாடங்களை நடத்த அவர்கள் விரும்பினால் நடத்தலாம்.

அனைத்து கல்லூரிகளிலும் தமிழில் தேர்வு நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென தனியாக கல்வி கட்டணம் ஏதும் இல்லை. தமிழ் வழியில் பொறியியல் பட்டப்படிப்பை படிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இதில் சேரலாம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்.

இந்த தமிழ் வழி பொறியியல் பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கென நான்கு துணைவேந்தர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் முதல் ஆண்டுக்குரிய புத்தகங்களை தயாரிப்பார்கள். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான பாடப்புத்தகங்களையும் அவர்கள் உருவாக்குவார்கள்.

இதே போல, பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டுமானம் மற்றும் எந்திரவியல் பொறியியல் பாடம் தமிழ் வழியில் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேசுப்பயிற்சி முக்கியம் என்பதால் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.


எல்லாம் சரி! தமிழில் படிக்கும் B.E படிப்பை அனைத்து நிறுவனங்களும் அங்கீகரித்து ,இப்படி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுடன் இந்த அரசாங்கம் இதை செய்யாமல் ,வெறுமனே பேருக்காகவும் ,புகழுக்காகவும் செய்வார்களெனில் , இதற்காக பாடுபட்டவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடும் .



சீனா,ஜப்பான்,ரஷ்ய,பிரான்ஸ்,ஜெர்மானியர்களைப்போல் தாய்மொழியில் கற்றால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க இதை ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொடுக்குமாறு இந்த தமிழின தலைவரின்!!! அரசை வேண்டி கேட்டு கொள்கிறேன். 


-சூரியன்

செவ்வாய், 17 நவம்பர், 2009

இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல!





இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.

இந்தித் திணிப்பை கண்டித்து தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை இதுதான் அமலிலும் உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இன்று வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக, கிட்டத்தட்ட அலுவலக மொழியாகவே மாறிப் போயுள்ளது.

பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு என்பதால், ஆங்கிலம் இணைப்பு அலுவலக மொழியாக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், ஒரு குறிப்பிட்ட மொழியை ஆட்சி மொழியாக கொள்ளவும் முடியாது என்ற கருத்தும் அப்போது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அதேபோல 351வது பிரிவின்படி, இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை ஊக்கப்படுத்த வேண்டியதும் மத்திய அரசின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றது.

அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது. அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகியவை சேர்க்கப்ட்டன. பின்னர் போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. அது பரிசீலனையிலும் உள்ளது.

மும்மொழித் திட்டம்...

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழி ஒன்றை சேர்த்து இந்த மும்மொழித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக இந்தி பேசாதவர்கள் அதிகம் இருந்த தென்னிந்திய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது.

1968ம் ஆண்டு மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக்கான கொள்கைத் திட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது. பின்னர் 1986ம் ஆண்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. பின்னர் 1992ம் ஆண்டு திட்ட நடவடிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது.

இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள் தவிர சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவையும் நவீன இந்திய மொழி வரிசையில் சேர்க்கப்பட்டன.

இந்தி பேசாதவர்கள் அதிகம் நிறைந்துள்ள மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக மாறியது.

இந்தி வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருமளவில் நிதியை ஒதுக்கியதும், திட்டங்களைத் தீட்டியதும், இந்த மாநிலங்களில் இந்தித் திணிப்பாக பார்க்கப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பு வெடித்தது.

இதில் ஒரு படி மேலாக, 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக இதே பெங்காலியை கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரி மேற்கு வங்க சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சொன்ன முக்கிய காரணம், அரசியல் சாசனச் சட்டத்தின் 348 (2) பிரிவு மற்றும் பிரிவு 7ன் கீழ், இந்தி பேசும் மாநிலங்களான பீகார், உ.பி. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது தான்.

அப்படி இருக்கும்போது தமிழ் அதிகமாக பேசப்படும் தமிழகத்திலும், பெங்காலி பேசப்படும் மேற்கு வங்கத்திலும் உயர்நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட மொழிகளே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நியாயமான வாதம் முன் வைக்கப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் இந்திக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் வாதம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தி்ன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.

இதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்படக் கூடிய பதவியில் இருப்பவர்கள். எனவே தமிழ் தெரிந்தவர்களை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிப்பதும், பெங்காலி தெரிந்தவர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் நியமிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றது.

ஆனால் இந்தி பேசாத நீதிபதிகளை பீகார், உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றும்போதும் இதே சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆனால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை.

தற்போது ஆட்சி மொழி குறித்த விவாதம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மையமாக வைத்து அது கிளம்பியுள்ளது.

அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது.

ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் வெடித்துள்ளது.

எம்.பிக்கள் தத்தமது தாய் மொழியில் பேசும்போது அதே சலுகை அமைச்சர்களுக்கும் தரப்படாதது நியாயமில்லை என்ற வாதமும் கிளம்பியுள்ளது.

மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ் .

திங்கள், 16 நவம்பர், 2009

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்




















குமரி கண்டம் (லெமூரியா):

தோழர்களே!! கடந்த சில நாட்களாகவே நானும் என்னுடைய நண்பரும் அடிக்கடி விவாதிக்கும் ஒரு பொருளாக இருப்பது லெமூரியா. லெமூரியா என்றால் அழிந்த இடம் என்று நம்முடைய குமரிக்கண்டத்திற்கு ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட BBC செய்தி நிறுவனம் குமரிகண்டத்தினை ஏற்கமறுக்கும் சூழலில் நான் எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து இங்கே எழுதுகிறேன்.

குமரி கண்டம் என்பது தற்போதைய இந்திய பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகா…கரிலும் ( Madagascar) கிழக்கே ஆ…திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சில பேரால் இந்த மடகா…கரும்,ஆ…திரேலியாவும் கூட குமரிகண்டத்தின் அழியாத பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரி கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களை பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்த பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப்போன புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. தனித்தழிழ் இயக்கத்தினர் மற்றும் தமிழீழத்தினர் கோரிக்கைகள், அவர்களின் உரிமைகள் பற்றின ஒரு தெளிவு இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கிய பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.

என்னுடைய எழுத்தைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm

இப்படிக்கு,
சூரியன்.