ஞாயிறு, 13 ஜூன், 2010

புரட்சியின் மறுபெயர் "சே"

 
புரட்சியின் அடையாளம் சே குவேரா , வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.

இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே,சிறு வயதிலிருந்தே அநீதியை கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார்.பணக்காரக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் தோழனாக இருந்தவர்.

அமெரிக்க முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே- வின் வாழ்கையை திசை மாற்றியது .முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தார்.இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார்.

முதலாளித்துவ அமெரிக்காவின் கீழ் இருந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தும் என நம்பினார் "சே".
 

அர்ஜென்டீனாவில் பிறந்த சே கியூபா பரட்சி வெற்றி பெற களம் இறங்கினார், அமெரிக்கா ஸ்தம்பித்தது, காஸ்ட்ரோ குவேராவை தன் நம்பிக்கையான தளபதியாக கருதினார்.மக்கள் சக்தி கியூபா வில் வெற்றி பெற்றது,சே விற்கு அமைச்சர் பதவி வழங்கினார் காஸ்ட்ரோ.

கொஞ்ச காலத்தில் அமைச்சர் பதவியை துறந்து காங்கோவின் விடுதலைக்கு போராட ஆப்ரிக்காவிற்கு சென்றார் ,அங்கிருந்து பொலீவிய நாட்டு விடுதலைக்காக போராடினார்.

சே வை விடாமல் துரத்தியது அமெரிக்க சி ஐ எ , கொரில்லா வீரர்களுடன் கடும் போர் ஏற்பட்டது,அங்குதான் சே சுட்டுக் கொள்ளப் பட்டார் .கலங்கினார் காஸ்ட்ரோ தன் ஒரு கையை இழந்தது போல் துடித்தார்,இன்று வரை அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ.
 

"அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே " - சே குவேரா

இன்று சே வின் பேத்தியான லிடியா குவேராவும் ஒரு புரட்சிக்காரர் தான்,பசுமையை நோக்கி புரட்சி செய்கிறார் இந்த பெண் குவேரா
புரட்சி தொடரும்................

கருத்துகள் இல்லை: