திங்கள், 30 நவம்பர், 2009

பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்






இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...

மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...


எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...


புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.

விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை

கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.

பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.

எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.

பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.


நன்றி : குழலி பக்கங்கள்

திங்கள், 23 நவம்பர், 2009

மாவீரன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே!-டி.ஆர்


வரலாற்றில் மட்டுமே நாம் படித்த மாவீரன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர், பிரபாகரன் மட்டுமே என்று கூறியுள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.

இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய 55வது பிறந்த நாளையொட்டி அவர் கூறுகையில்,



ஒவ்வொரு பூவுக்கும் வாசமிருப்பதைப் போல... ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. இந்த நாள் மாவீரன் பிறந்த நாள்.

வரலாற்றில் எத்தனையோ மாவீரர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். மாவீரன் என்றால் இந்த சமகாலத்தில் நெப்போலியனை மட்டுமே வரலாறு சொல்லுகிறது. அந்த நெப்போலியன் வரலாற்றைப் படித்தபோதே என் நரம்புகள் புடைத்தன.

ஆனால் இன்று ஒரு தமிழனாக... மாவீரன் என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தத்தைப் பார்க்கிறேன், பிரபாகரன் மூலம். புறநானூற்றுத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை என் கண் முன்னால் பார்த்தேன், பிரபாகரன் உருவில்.

இனி எப்போதும் மாவீரன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே. 'யாருக்கும் அடிபணிய மாட்டோம்... சுயநலத்துக்காக தன் இனத்தின் நலத்தை அடகு வைக்க மாட்டோம்' என்று பொங்கி எழுந்து போராடிய மாவீரன் நமது பிரபாகரன்.

வானத்தில் இருக்கிறான் கரன்... இந்த மனித குலத்தில் இருக்கிறான் பிரபாகரன்..." என்றார்.

திருமாவளவன்:

பிரபாகரன் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையி்ல்,

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமைப்பட்டு பூரிப்படையும் நாள்.

தமிழன் தலை நிமிர்ந்த நாள். தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும், ஐ.நாவில் தமிழன் கொடி பறக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் 3 தசாப்தங்களாய் போராடி உலகை வியக்கச் செய்த தலைவன் அவர்.

இன்றைய தேவை, நம் அனைத்து தரப்பின் ஒற்றுமை. அந்த ஒற்றுமையுடன் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்பதே தலைவர் பிறந்த நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வைக்கும் கோரிக்கை என்றார்.

புலிகள் வானொலியில் தமிழக தலைவர்கள் வாழ்த்து:

இந் நிலையில் பிரபாகரனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இதை விடுதலைப் புலிகளின் வானொலி தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வானொலியான வாய்ஸ் ஆப் டைகர் தற்போது இணையதளம் மூலம் இயங்கி வருகிறது.

பிரபாகரனின் பிறந்த நாளையொயொட்டி புலிகளின் வானொலியில் ஈழப் போராட்டத்தை வாழ்த்தும், பிரபாகரனை வாழ்த்தும், ஈழத் தமிழர்களின் வீரத்தைப் புகழும் பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

இடை இடையே தமிழக அரசியல் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகளையும் ஒலிபரப்பு செய்து வருகின்றனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் செல்லப்பா உள்ளிட்ட பலரும் பிரபாகரனைப் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கட் அவுட்கள்-போஸ்டர்கள்..

இதேபோல பிரபாகரனை வாழ்த்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது உருவம் பதித்த கட் அவுட்கள், போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன.

புலிகளின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் பிரபாகரனின் பிறந்த நாளை இன்று தமிழகத்திலும் கொண்டாடி வருகின்றனர்.

Thanks to : Thatstamil.com

செவ்வாய், 17 நவம்பர், 2009

இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல!





இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.

இந்தித் திணிப்பை கண்டித்து தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை இதுதான் அமலிலும் உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இன்று வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக, கிட்டத்தட்ட அலுவலக மொழியாகவே மாறிப் போயுள்ளது.

பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு என்பதால், ஆங்கிலம் இணைப்பு அலுவலக மொழியாக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், ஒரு குறிப்பிட்ட மொழியை ஆட்சி மொழியாக கொள்ளவும் முடியாது என்ற கருத்தும் அப்போது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அதேபோல 351வது பிரிவின்படி, இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை ஊக்கப்படுத்த வேண்டியதும் மத்திய அரசின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றது.

அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது. அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகியவை சேர்க்கப்ட்டன. பின்னர் போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. அது பரிசீலனையிலும் உள்ளது.

மும்மொழித் திட்டம்...

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழி ஒன்றை சேர்த்து இந்த மும்மொழித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக இந்தி பேசாதவர்கள் அதிகம் இருந்த தென்னிந்திய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது.

1968ம் ஆண்டு மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக்கான கொள்கைத் திட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது. பின்னர் 1986ம் ஆண்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. பின்னர் 1992ம் ஆண்டு திட்ட நடவடிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது.

இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள் தவிர சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவையும் நவீன இந்திய மொழி வரிசையில் சேர்க்கப்பட்டன.

இந்தி பேசாதவர்கள் அதிகம் நிறைந்துள்ள மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக மாறியது.

இந்தி வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருமளவில் நிதியை ஒதுக்கியதும், திட்டங்களைத் தீட்டியதும், இந்த மாநிலங்களில் இந்தித் திணிப்பாக பார்க்கப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பு வெடித்தது.

இதில் ஒரு படி மேலாக, 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக இதே பெங்காலியை கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரி மேற்கு வங்க சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சொன்ன முக்கிய காரணம், அரசியல் சாசனச் சட்டத்தின் 348 (2) பிரிவு மற்றும் பிரிவு 7ன் கீழ், இந்தி பேசும் மாநிலங்களான பீகார், உ.பி. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது தான்.

அப்படி இருக்கும்போது தமிழ் அதிகமாக பேசப்படும் தமிழகத்திலும், பெங்காலி பேசப்படும் மேற்கு வங்கத்திலும் உயர்நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட மொழிகளே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நியாயமான வாதம் முன் வைக்கப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் இந்திக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் வாதம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தி்ன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.

இதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்படக் கூடிய பதவியில் இருப்பவர்கள். எனவே தமிழ் தெரிந்தவர்களை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிப்பதும், பெங்காலி தெரிந்தவர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் நியமிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றது.

ஆனால் இந்தி பேசாத நீதிபதிகளை பீகார், உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றும்போதும் இதே சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆனால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை.

தற்போது ஆட்சி மொழி குறித்த விவாதம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மையமாக வைத்து அது கிளம்பியுள்ளது.

அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது.

ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் வெடித்துள்ளது.

எம்.பிக்கள் தத்தமது தாய் மொழியில் பேசும்போது அதே சலுகை அமைச்சர்களுக்கும் தரப்படாதது நியாயமில்லை என்ற வாதமும் கிளம்பியுள்ளது.

மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ் .

திங்கள், 16 நவம்பர், 2009

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்




















குமரி கண்டம் (லெமூரியா):

தோழர்களே!! கடந்த சில நாட்களாகவே நானும் என்னுடைய நண்பரும் அடிக்கடி விவாதிக்கும் ஒரு பொருளாக இருப்பது லெமூரியா. லெமூரியா என்றால் அழிந்த இடம் என்று நம்முடைய குமரிக்கண்டத்திற்கு ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட BBC செய்தி நிறுவனம் குமரிகண்டத்தினை ஏற்கமறுக்கும் சூழலில் நான் எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து இங்கே எழுதுகிறேன்.

குமரி கண்டம் என்பது தற்போதைய இந்திய பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகா…கரிலும் ( Madagascar) கிழக்கே ஆ…திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சில பேரால் இந்த மடகா…கரும்,ஆ…திரேலியாவும் கூட குமரிகண்டத்தின் அழியாத பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரி கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களை பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்த பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப்போன புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. தனித்தழிழ் இயக்கத்தினர் மற்றும் தமிழீழத்தினர் கோரிக்கைகள், அவர்களின் உரிமைகள் பற்றின ஒரு தெளிவு இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கிய பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.

என்னுடைய எழுத்தைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm

இப்படிக்கு,
சூரியன்.


வெள்ளி, 13 நவம்பர், 2009

புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழைய ரூட்டில் ரஜினி-கமல்

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுது என்பதால் அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ரஜினியும் கமலும்.

முன்பெல்லாம் இவர்கள் இருவரும் வருடத்திற்கு மூன்று, நான்கு படங்கள் நடித்தார்கள்.இப்போது அந்த பழைய ரூட்டை பிடிக்க முடிவெடித்திருக்கிறார்கள்.

நிறையை படங்கள் பண்ணினால் கமர்சியல் என்ற ஒரே குதிரையில் ஓடவேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம். கமர்ஷியல்,கலைப்படங்கள் என்று கலந்துகட்டி அடிக்கலாம் என்று நண்பன் ரஜினிக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் கமல்.

’சரியாச்சொன்னீங்க கமல்’என்று பதில் சொன்ன ரஜினியும் சரி’யா முடிவெடித்திருக்கிறாராம்.

நீண்ட நாள் புராஜக்ட் போய்க்கிட்டிருந்தாலும் நடுநடுவே சில படங்கள் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்கள் இப்படி பழைய ரூட்டை பிடிக்க திட்டமிட, விஜய்,அஜீத் இருவரும் புதிய பாதையில் போக திட்டமிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தங்களது படங்கள் மூலமும், பேட்டிகள் மூலம் மாறி மாறி பஞ்ச் டயலாக் அடித்து தங்களது ரசிகர்களை உசுப்பேத்திக்கொண்டார்கள்.

இப்படிப்பட்ட சமயத்தில் அஜீத்தின் திருப்பதி பட பூஜைக்கு விஜய் விஜயம். அதன்பிறகு இவர்களது சந்திப்பு வீடுவரை சென்றது. இருவரது வீட்டுக்கும் இருவரும் சென்று விருந்து உபசரித்துக்கொண்டார்கள்.

தற்போது ஏவி.எம். ஸ்டூடியோவில் பக்கத்து பக்கத்து ப்ளோர்களில் அஜீத்தின் அசல், விஜய்யின் சுறா படத்தின் சூட்டிங். இடைவேளையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றார் அஜீத்.

இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கையில்,’’சமீபத்தில் கமல் சார் ஒரு பங்சன்ல இதுக்கு முன்னாடி ரஜினி மாதிரியும் என்னை மாதிரியும் நண்பர்கள் கிடையாது என்று சவால் விட்டார். எனக்கு புல்லரிச்சுச்சு’’என்று அஜீத் சொல்ல,

‘’அவுங்க ரெண்டு பேருக்கு பின்னால நாமதான் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் என்பதை நிரூபிக்கனும்’’என்று விஜய் சொல்ல,

‘’ரெடி,ஸ்டார்ட் ’’என்று சிரித்தாராம் அஜீத்.

நன்றி : நக்கீரன்

வியாழன், 12 நவம்பர், 2009

ஒகேனக்கல் ரகளையான பயணம் - பாகம் 3


அப்பாடா !!!! ஒரு வழியாக ஒகேனக்கல் சென்று விட்டோம் .நாங்கள் ஏற்கனவே சென்று இருந்தபொழுது எங்களுக்கு பரிசல் ஒட்டி வந்தவரின் Visiting card - ஐ ( அதிர்ச்சி வேண்டாம் !! இங்கு பரிசல் ஒட்டுபவரிலிருந்து பொட்டி கடை வைத்திருப்பவர் வரை visitng card உடன் தான் சுற்றுகிறார்கள் )நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் . ஒகேனக்கலுக்கு வண்டி சென்ற உடனே parking charge வசூலிப்பார்கள் . அங்கிருந்தே உங்களை மொய்க்க தொடங்கிவிடுவார்கள் ., வேறு யாருமில்லை அவர்கள் பரிசல் ஓட்டுபவர்கள் , மசாஜ் செய்பவர்கள் என நீளும் பட்டியல் ,இதில் மீன் வாங்கி கொடுத்தால் சமையல் செய்துதர கூட ஆளிருக்கு ( நீங்கள் வேறு எதற்காவது ஆள் எதிர்பார்த்தால் போக வேண்டிய blog வேற !!!!! :) :) :) )

நாங்கள் பார்க்க வேண்டிய நபரின் பெயர் பெருமாள் ,அவருக்கு call செய்து விட்டு சந்திக்க விழைகிறோம் .இருந்தாலும் மக்கள் எங்களை விட்டபாடில்லை .....எப்படியோ அவர்களை எல்லாம் சமாளித்து கொண்டு பெருமாளை பார்த்து விட்டோம் .அந்த திருப்பதி பெருமாள கூட easy ஆக பார்த்துடலாம் போலிருக்கு இந்த பெருமாள பார்க்க நாங்க ரொம்பவே சுத்தி விட்டோம் . எப்படியோ பெருமாளை பார்த்து என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்லி விட்டு ....... மீன் வாங்க புறப்பட்டோம் .

மீன்தானே வாங்க போறோம்னு தெரியாம எல்லா பைகளையும் தூக்கி கொண்டு கிளம்பினார்கள் ..என்னமோ சபரி மலைக்கு வந்த மாதிரி ஆளாளுக்கு ஒரு பை வைத்திருந்தோம் . இருந்தாலும் எங்கள் கூட்டத்திலேயே ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருக்கிற Mr.Omlet மட்டும் எந்த பை யும் தூக்காம எமாத்திகிட்டே வந்தான் . கடைசில சண்ட போட்டு ஒரு பெரிய பை தூக்க வச்சிட்டோம் . இப்படியே சண்ட போட்டுக்கிட்டு மீன் விற்கிற இடத்தை நோக்கி நடக்கும் போதே எங்கள் அணியின் Chinna Hulk க்குக்கு ஒரு ஆசை இப்போதே சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விட வேண்டுமென்று , நாங்களெல்லாம் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் வழக்கம் போல அடம் பிடித்து " கைபேசி ஓவி " யையும் கூட கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான் . ஆனா அவன் குளிக்க போறத விட ரொம்ப ஆர்வமா இருந்தது எங்களுக்கு முன்னாடி நடந்து சென்ற ஒரு பெண்ணை பார்க்கத்தான் :) :) :) . இது தெரிந்ததும் இன்னும் சிலர் அவனுடன் கிளம்பி விட்டனர் . நாங்கள் அந்த பைகளை காவல் காத்து கொண்டு மீன் வெட்டும் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம் ?? .

மீன் வெட்டி சமைக்கத்தயார் . அப்புறம் நாட்டுக்கோழி பிடிக்க போக வேண்டும் , ஆனால் குளிக்க செல்கிறோம் என்று போனவர்கள் ஆளையே காணவில்லை . போன் பண்ணாலும் யாரும் எடுக்கவில்லை . அடிக்கிற வெயிலுக்கு எங்களால் அங்கு நிற்கவே முடியவில்லை ( நாமெல்லாம் பெங்களூர் வாசியாச்சே, அதான் சைடுல இப்படி ஒரு பிட்டு :) :) :) )

ஒரு வழியாக காக்காய் குளியல் முடித்துவிட்டு , ஒரு படையாக வந்தார்கள் .... அப்புறம் அவர்களிடம் சில பல பைகளை கொடுத்துவிட்டு நடையை கட்டினோம் . நானும் சைதையும் கார் இருக்கும் இடம் வந்து சேர்ந்து திரும்பிபார்த்தால் HULK ..Chinna Hulk ,Ovi, Five ,Omlet யாரையுமே காணோம் .ஒரே காண்டா போச்சு ..சரி இதுக்கு மேல இவங்கல எங்கே தேடுவதுன்னு ...கார் பக்கத்திலேயே இருந்து விட்டோம் ....வந்தார்கள் 30 நிமிடம் கழித்து ஆடி அசைந்து வழியில் chinna hulk க்குக்கு ஒரு பெரிய சைஸ் ட்ரவுசர் வாங்கிகிட்டு ... !!!!!! .

இந்த நேரத்தில் சைதை நான் மசாஜ் செய்ய போறேன்னு ஒரு பிட்ட போட்டதும் நீ ..நானென்று ஒரே போட்டி ... கடைக்கு சென்றிருந்த எங்கள் அணியின் பெருசு களிடம் சென்று ஒரு நவரத்தினா ஆயில் வேண்டும் என்று சொன்னதும் அதெல்லாம் ஏற்கனவே வாங்கிட்டோம் என்று சொன்னார்கள் . பெருசு பெருசு தான்னு நாங்கள் அப்படியே ஒரே பெருமிதத்தில் !! திரும்பி நடந்தோம் .

ஓர் வழியாக கோழி, ( நாட்டு கோழி என்றது chinna hulk க்குக்கு ஒரே கொண்டாட்டம் ...உற்சாகத்தில் என்ன என்னமோ பேசினான் !!!. ) சமையல் சாமானெல்லாம் வாங்கிட்டு காருக்கு வந்தார்கள் . பரிசல் ஓட்டுனர் பெருமாள் அண்ணன் ஆட்டோ வோடு ரெடி யாக வந்து விட்டார் . என்னடா இவன் குழப்புறான்னு நினைக்க வேண்டாம் . நாங்கள் ஒகேனக்கல் Bus Stand லேர்ந்து ஒரு 10 Km காட்டுக்குள் சென்று அங்கிருந்து மீண்டும் Bus stand க்கு பரிசலில் வரணும் என்பதுதான் plan . இந்த ஐடியா நல்ல இருக்குதா ???

அப்படியே ..அற்றில் வரும் வழியில் ஒரு தீவில் இறங்கி குளிச்சிட்டு ,சமைச்சு சாப்பிட்டு விட்டு வருவதாக Plan பண்ணி கிளம்பினோம் !!! ..... :) :)
ஆனால் , எதையும் " பிளான் பண்ணி செய்யணும் ,பிளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான்னு " வடிவேலு சொல்ற மாறியே !!!!! ..எங்க எல்லாரையும் ஒரு விஷயம் சொல்ல வெச்சது ...
அப்படி என்ன விஷயம் அது ?????

- தொடரும் ..

மரபணு கத்தரிக்காய் உண்ணாதீர்கள் – எச்சரிக்கை.


பி.டி.கத்தரிக்காய்: எதிர்ப்புகள் வலுப்பது ஏன்?

கத்தரிக்காய் முற்றினால் கடைக்குத் தான் வந்தாகனும்' என்ற பழமொழி தமிழ்நாட்டில் பிரபலம். இப்போது பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் சந்தைக்கு வருவதற்கு முன்பே சந்தி சிரிக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம். அதன் கீழ் வரும் 'மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் இதற்கும் அமைச்சர் 'முல்லை பெரியாறு'' புகழ் ஜெய்ராம் ரமேஷ்தான்!

மான்சான்ட்டோ

இதில் என்ன பிரச்சனை? நவீன விவசாயத்தை ஏற்கவேண்டியது தானே? விஞ்ஞான வளர்ச்சி மூலம் அதிக லாபம் பெறலாமே? என பலரும் கேட்கிறார்கள். இதில் தொலை நோக்கு அபாயம் இருக்கிறது. நமது சந்ததிகளின் நலன் குறித்த எச்சரிக்கை இருக்கிறது.

அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் விவசாய பொருள்களின் விதைகளை நமது வயல்களில் தெளித்தால் அது செழித்து வளரும், காய்த்து கொட்டும்.

ஆனால் அதன்மூலம் வரும் விதைகளைப் பயன்படுத்த முடியாது.விதைகளின் விற்பனை உரிமை மான்சான்டோ என்ற அமெரிக்கா நிறுவனத்தின் கீழ் இருக்கும். (பார்க்க: பெட்டி செய்தி)

பழைய அனுபவம்

இதன் அபாயங்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. இவர்களின் மரபணு மாற்று பருத்தி விதைகள் பெரும் விளம்பரங்களோடு 1990களில் இந்தியாவுக்கு அறிமுகமானது.

அது உணவுப்பொருள் அல்ல என்பதால் பெரிதாக யாரும் எதிர்க்கவில்லை. எழுந்த எதிர்ப்புகளும் வலுவாக உருவாகவில்லை.

அந்த பருத்தி விவசாயம் ஆரம்பத்தில் லாபம் தருவதுபோல் தெரிந்தது. பின்னர் தன் வேலையை காட்டியது, அந்த பருத்திகளை தின்ற மாடுகள் தொண்டை புற்று நோய் வந்து மண்டன. ஆடுகள் கொத்து, கொத்தாக மண்ணில் வீழ்ந்தன.

அந்த பருத்தியை பயிரிட்ட மண் பாதிப்புக்குள்ளானது. மறு விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் கேள்விக்குறியானது. விவசாயிகள் கடனாளியாயினர். அதனால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலையால் மரணம் அடைய, அது ஆந்திராவில் புயலை கிளப்பியது.

அந்த மான்சான்டோ நிறுவனம் இப்போது மஹிகோ என்ற தனது துணை நிறுவனம் மூலம் கத்தரிக்காயை மரபணு மாற்றம் செய்து நுழைய பார்க்கிறது. இந்திய வேளாண் விஞ்ஞானிகளையும். ஆட்சியி¬ருக்கும் புள்ளிகளையும் சரி கட்டி இந்திய விவசாயத்தை விழுங்க பார்க்கிறது.

இது பருத்தி போல் அல்லாமல் உணவுப் பொருள் என்பதால் எதிர்ப்பு வலுவாகி அது மக்கள் மயப்படுத்தப்பட்டதால் மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

ஏன் இந்த மரபணு மாற்றம்?

சமீபகாலமாக புதிய வகை பூச்சிகள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக்காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக்குள்ளாகினர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளித்தனர். அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவது என யோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி!

அதாவது பல்வலி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!

இப்படித்தான் பி .டி .பருத்திக்கும் விளக்கம் சொன்னார்கள், பருத்தியும் அழிந்து விவசாயிகளும் வீழ்ந்த அனுபவத்தை அறிந்திருந்த இந்திய விவசாய அமைப்புகள், வேளாண் நிபுணர்கள், தொண்டு அமைப்புகள் பி.டி. கத்தரிக்காயை ஏற்கமாட்டோம் என கொந்தளித்துவிட்டனர். நாடு முழுவதும் பொதுமக்களின் கருத்தை கேட்ட பின்னரே பி.டி. கத்தரிக்காயை வணிக நோக்கில் பயிரிட அனுமதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து பின்வாங்கியிருக்கிறார்.

உடல் நலத்திற்கு ஆபத்து

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரானி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எலிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரலின் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேவையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று பி.டி விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இங்லாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான்!

ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

தேவை தடை

விவசாயத்துறை என்பது மாநில அதிகாரத்தின் கீழ் இடம் பெறுகிறது தமிழக அரசு நமது மண்வளம், விவசாய முறைகள், அடுத்த தலைமுறைகளின் நலன், நிகழ்கால தலைமுறைகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மரபணு மாற்ற விதைகளை தடை செய்வதாக அறிவித்து மத்திய அரசுக்கே முன் மாதிரியாக திகழ வேண்டும்,

மான்சான்டோவின் உலக முதலாளித்துவ சதிக்கு பலியாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும்.

இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக்கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.

இப்போது நாட்டில் உணவுபஞ்சம் இல்லை! விலைவாசி உயர்வு தான் இருக்கிறது! மரபணு மாற்று விதைகளை பயிரிட வேண்டிய எந்த நெருக்கடியும் இல்லை. விவசாயிகளும் கேட்கவில்லை.

உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.

பெட்டிச் செய்தி - அது என்ன மான்சான்டோ?

அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.

அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் பலியாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?

நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி¬ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,

மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,
அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,

மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!
இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியாவிலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.

-அபூ அயிஷா . TMMK INFO

செவ்வாய், 10 நவம்பர், 2009

வருங்கால சி.எம் விஜய்க்கு....


நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடேட் நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்...

எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்துக்கெல்லாம் நீ ஏண்ணா ராகுல போய் பார்க்கற...? அவரு வருவாரு பாரு... நம்பளை தேடி...

நானும் 3 நாளா யோசிச்சிட்டேன் உன்ன எந்த தொகுதில நிப்பாட்டலாம்னு... நீ எந்த தொகுதில நின்£லும் அன்னபோஸ்ட்டா ஜெயப்பங்கறது வரலாறு சொல்லும்... ஆனா, நம்ம ச.மு.க. கெத்த தமிழ்நாட்டுக்கு காட்டணுமா இல்லையா... (நம்ம கட்சி பேரு ச.மு.க.ன்னேன்... சந்து முன்னேற்ற கழகம்...)

நீ மத்திய சென்னைல நில்லு... ஏன்னு கேளு, சேப்டி மத்திய சென்னைதான். ஏதும் பிரச்சனைனா வீட்டுக்கு ஓடி வந்துடலாம்.. புலி உறுமுது பாட்ட தெருவுக்கு தெரு லவுட் ஸ்பீக்கர் வெச்சு போட்டம்னு வெச்சுக்க, பாட்ட கேட்டு மெரண்டு போய் ஓட்ட போட்ருவாங்கே... கண்ண மூடிகிட்டு ஜெய்ச்சிட்லாம். உங்கப்பா பிரசாரத்துக்கு வரணும்னுகூட அவசியம் கெடயாது... ஒரு பிரச்சனை முடிஞ்சிது... இப்போ தமிழ்நாட்டோட மத்த தொகுதிகள பத்தி பேசுவோம்... நாமக்கல்ல பேரரச நிப்பாட்றோம்... ரமணாவ பாபனாசத்துல, விக்ரமன உடுமலைபேட்டைல, என்னது கௌதம் மேனன்க்கா... என்ன பேசற நீ... அவர்லாம் ஒரு டைரக்டர்... ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா...? வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்... இப்போதைக்கு இந்த லிஸ்ட அன்னௌன்ஸ் பண்ணு... மிச்சத்த அப்புறம் ஷோபா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு முடிவெடுப்போம்...

இப்ப என்னோட பெரிய பயம் என்னன்ன லட்சிய திமுகவ என்ன பண்றதுனுதான். நமக்கு மிக பெரிய போட்டிய நான் அவங்ககிடேர்ந்து எதிர்பார்க்கறேன்.. ஒரு வோட்டுதான் வெச்சுருகாங்கன்னு நம்ம அலட்சியமா விட்ற கூடாது.. அந்தாளு மேடைக்கு மேடை அடுக்கு மொழில பேசி உன் இமே ஜ டேமேஜ் பண்ணிடுவாரு.. ஆக கடைசி பிரச்சனை திமுக?. நம்மல்லாம் பொறந்துட்டதுனால அரசியலுக்கு வந்துருக்கோம்.. ஆனா, அவங்கே அரசியல் பன்றதுகுன்னே பொறந்தவங்கே... அவங்ககிட்ட சின்னபுள்ள தனமா மோதுனோம்ன தடம் தெரியாம போட்ருவாங்கே... அதனால அத மட்டும் அறிவு பேராசான் திரு.அப்பா அவர்கள்ட்ட அறிவுரை கேட்டுக்குவோம்...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... நம்ம ஆட்சிக்கு வந்தோம்ன்னா அந்த சொம்பு வந்து நம்மளோட சேர பார்ப்பாரு... ஆனா அவர சேத்துக்காத.. உன்ட்ட சொல்ல மறந்துட்டேன். அவரு போன படத்துல உன்ன கலாசிட்டாருங்ண்ணா... நான் குருவி இல்ல.. பில்லான்னு சொல்லிட்டாரு... அது சத்துக்கு அது எப்டின்னா உன்ன கலாய்க்கலாம். விடலாமா? அத... நசுக்கறோம்... அவரு மட்டும்தான்னா நமக்கு காண்டு... மத்த எல்லாரும் நல்ல பசங்க... இவர மட்டும் பாண்டி பஜார்ல கஞ்சா வித்தாருன்னு சொல்லி உள்ள தூக்கி போட்டு முட்டிய உடைச்சு விட்டறலாம்..

அண்ணோவ் நீ பார்லிமென்ட் கதவ வெல்டிங் மெஷின் வெச்சு தெறந்து காலால எட்டி உதைச்சு கதவ தொறந்து உள்ள போய் லாலுவ நக்கல் பண்ணிகிட்டே பாக்கு மெல்ரத பார்த்து இந்தியாவே மெரள போற நாள்க்காக காத்திருக்கேன்னா...


நன்றி-ஒரு பேப்பர்
லண்டன்

திங்கள், 9 நவம்பர், 2009

இராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரணதண்டனை





கொளத்தூர் மணி


மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப் பற்றி சீமான் அடுத்துப் பேச இருக்கிறார்.

நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ -இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், - நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ - அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்து இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேச விரும்புகிறேன்.

நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது; நடந்தால் வலிக்கிறது. அந்தப் புண்ணை கீறிவிட்டுத்தான் ஆற்றவேண்டும். அதை நாம் யாரும் செய்யவில்லை. ‘நாம் அந்தப் புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும்’ என்று நான் விரும்புகிறேன்.

கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற எனக்கு, அதை விளக்கவேண்டிய கடமை இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டு இருக்கிறார்களா? காங்கிரஸ் தலைமையில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள். காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.

தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் நமக்கு வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிட மொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப் பார்க்கிறான். இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் நம்மினத்தவர்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாக வந்து நிற்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.

காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமது தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியவே இல்லை. எந்த்த தடயமும் காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழித் தீர்மானம் வந்தபோது இந்திக்கு ஆதரவாக சரிபகுதி வாக்குகள், இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள். காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை இந்திக்கு அளித்துதான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும். நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. கள்ள ஓட்டு போல, இந்த தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள்.

இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார் நேரு, ‘நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று. பெரியார் சொல்லுவார், ‘முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதி அவர்’ என்று. ஆனால், ‘நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று 1951-யில் சொன்ன நேரு, 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், ‘சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள்’ என்று.

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டி சில்வா. 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதினார். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், அவர் மீது நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

ராஜீவ் காந்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதால் அதற்கு வருவோம். ராஜீவ் காந்தி யார்? வேளாண்மை செய்யும் விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தியும் அதை எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

ராஜீவ் அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? ஜான் நீல் என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டான். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்த்திருக்கிறோம், கட்டபொம்மன் சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று. இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமானது அல்ல.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா இன் சிறீலங்கா’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன. நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகத் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள். அதில் பல செய்திகள், அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார்.

அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு ஹர்சரத் சிங்விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்கு தொலைபேசியில் சொல்கிறான், ‘இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு’ என்று. அவர் மறுக்கிறார். ‘நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் கீழ் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் கேட்கிறார். அதன்பின் தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார். ‘மறுத்துவிடு என்று சொல்லிவிடு. அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது’ என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு ‘முடியாது’ என்று சொல்கிறார்.

அப்போது தீட்சித் சொல்கிறான், ‘இதை நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது’ என்று. இதை தனது நூலில் எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் இராஜீவ் காந்தி இல்லையா? அப்போது அந்தத் தளபதி இராஜீவ் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை; ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், அவரைக் கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, ‘இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்’ என்று ஆர்.கே.தவானைக் காட்டுகிறது.

ஆனால் அவரை தனது கட்சிக்குப் பொது செயலாளராக நியமிக்கிறார் இராஜிவ் காந்தி. அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். இப்படி தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி அவன்.

ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போன இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இராஜீவ் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்வதற்கு.

1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 22 ஆண்டுகளுக்குப் பின்னாடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் இவர்களுக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே, என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்? ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. அதை நிறைவேற்ற இந்தக் காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக ‘உயிர்தியாகம் செய்த’ ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள் இது வரை? இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்தியாவிற்கு எதிரானவர்களை கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது சீன நாடு இலங்கையில் கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்? இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என் நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்தாய், இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தாய். இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய். நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், ஒரு ராஜீவ் காந்திக்கு இவர்களுக்கு இத்தனை ஏக்கம் வருகிறதே! ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே? ஆயிரம் பெண்களைக் கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே? வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லிச் சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று காங்கிரஸ்காரன் சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். தன்னுடைய மகன் ஸ்டாலினைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் சிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் பிரபாகரன் சொன்னார், ‘ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன்’ என்று சொன்னார். ஆனால் நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா?

தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார். ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், இரக்கம் இருக்கிறவன் அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார். முத்துக்குமார் தனது கடிதத்தில் ‘அறத்திற்கே அன்பு சார்பென்ப’ என்று திருக்குறளை நினைவூட்டுகிறார். வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம் என்று. அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்.

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு, கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா!

இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? காங்கிரஸ்காரன் கேட்கிறான். இலங்கை கப்பற்படை வீரன் இராஜீவை அடித்தானே, ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், செத்துப் போயிருப்பான். அந்த கப்பற்படை வீரனிடம் கேட்டபோது, அவன் சொன்னான், ‘நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது’ என்று.

காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், ‘நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான்’ என்று சொல்கிறானே, ‘நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை’ என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது. இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களைப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம் போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும்போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இருக்கிறது. ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்பதுதான். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லி இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று முழங்க வேண்டும்.

சிங்களவனுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும். நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா என்று சந்தேகிக்க வேண்டும். சந்தேகிப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி யுத்தம் தொடுத்தார்கள். அந்த நாட்டில் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் அகதிகளாக இங்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம். 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது.

நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. எழுபதுகளில் ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் அப்போது 6 கோடி என்றால் இப்போது 100 கோடி ரூபாயுக்கும் மேல். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டியபோது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு என்ற சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன் ஈழத் தமிழ் அகதிகளுக்கு என்ன செய்தான்?

நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், கான்கிரீட் கட்டிடத்தில் வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது. 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. போகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு, பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, அவன் திபெத்தியன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழ்நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?

ஈழத்தமிழர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழனை ‘புலிகள்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைப்பதற்குத்தான் தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப் பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு. மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நாம் யோசிக்கிறோம், இது நம் அரசாக இருக்க முடியுமா? நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.

ஏற்கனவே சொன்னேன், வெளிநாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்கிறான். இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை. 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஆங்கிலேயன் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம். அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். ‘அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் டயரைச் சுட்டுக் கொன்றான் உத்தம் சிங்.

அங்கே போய் உத்தம்சிங் சுட்டது, ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கியில் சுட்ட டயரை அல்ல, அதாவது ஜெனரல் டயர் இல்லை. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சுட ஆணையிட்டவனின் பெயரும் டயர்தான். அதாவது மைக்கேல் டயர். நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கிற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினான். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோக வேண்டும்? அதனால் எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைத்தான் கொன்றான்.

21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் அடக்கம் செய்யப்பட்ட அவனது உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள்.

கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி. இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம். ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுக்கப்பட்டதற்குக் காரணமானவனை, உத்தம்சிங் போல் ஈழத்தமிழன் எவனாவது சுட்டுக் கொல்கிறான். உங்கள் நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும். நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடை நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான். நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், ‘இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா’ என்று. டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல. அகில இந்திய கட்சியில் இருக்கிற இன உணர்வு ஏன் நமக்கு இல்லை?

1972-யில் செல்வா தமிழ்நாடு வந்தார். பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்டார். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ‘ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை எப்படி உதவ முடியும்?’. நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம் இது வரை? இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.

நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும்.

1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்தபோது, ‘அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள்’ என்று ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

சத்தியமூர்த்தியைக் குறித்து குத்தூசி குருசாமி ‘அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். ‘தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு. அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள்’ என்று எழுதினார்கள். அடுத்த வாரமே சத்தியமூர்த்தி மீது அடித்தார்கள். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, ‘அதோ காங்கிரசுகாரன் போறாங்’கிறது கூட ஒரு போராட்டம்தான். அவனை அவமானப்படுத்த வேண்டும். வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம். எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி நடத்தவிருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

(15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரை)

ஒகேனக்கல் - ஒரு ரகளையான பயணம்... பாகம் 2

எல்லோரும் முதல் பாகத்தை படித்து ரசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பாகத்தில் அடி எடுத்து வைக்கின்றேன் .

ஓசூரிலிருந்து புறப்பட்ட எங்கள் கார் மின்னல் வேகத்தில் ஒகேனக்கல் இருக்கும் திசையை நோக்கி பறந்தது . இடையில் எங்கும் தேவையில்லாமல் நிறுத்தக்கூடாது என்று தான் சென்று கொண்டிருந்தோம் .ஆனால் அந்த ஒரு சம்பவம் எங்களுக்கு முன்னால்சென்ற காரை நிறுத்த வைத்துவிட்டது . அது என்ன என்று சொல்வதற்கு முன் நாங்கள் கண்ட ஒரு விபத்தை பற்றி சொல்ல நினைக்கிறேன் , ஓசூரிலிருந்து சுமார் 20 km தொலைவில் நாங்கள் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு சரக்கு லாரிகள் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போல மோதி விபத்துக்குள்ளாயிருந்தன.இந்திய நாட்டிற்கே உரிய பாரம்பரிய பண்பின் அடிப்படையில் அந்த இடத்தில் காவல் துறையோ ,பொது மக்கள் கூட்டமோ இல்லாதிருந்தது எங்களுக்கு இந்நாட்டு மக்களை நினைத்து ( என்னையும் சேர்த்துத்தான் ) ஆச்சர்ய பட வைக்கும் வேலை இல்லாமல் செய்துவிட்டது .

அதை கடந்து சிறிது தூரம் சென்றதும் எங்கள் முன்னால் சென்ற கார் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தது .ஏற்கனவே சொன்னபடி தேவையில்லாமல் எங்கும் காரை நிறுத்தக்கூடாது என்று சொல்லியிருந்ததால் என்ன ஆச்சு என்ற தோரணையிலேயே நாங்கள் எங்களுடைய காரையும் நிறுத்தினோம் .காரிலிருந்து கீழிறங்கிய உடனே நண்பர்கள் சிலர் வழக்கம் போல தம் அடிக்க ஆரம்பித்து விட்டனர் . நாங்கள் கூட இதற்காகத்தான் நிறுத்தினார்களோ என்று நினைத்துகொண்டிருக்கும் வேலையில் எங்களுடன் வந்திருந்த நண்பன் ஒருவன் அங்கிருந்த Cement bench இல் மிகவும் சோர்வாக உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு இவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டோம் . இதற்க்காகத்தான் காத்திருந்தது போல அனைவரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் .என்ன நடந்தது என்று விசாரிக்கையில் கடந்த பாகத்தின் கடைசி வரிக்கான விடை கிடைத்தது ...

அதாவது லாரி விபத்தினை கடந்து சென்ற பிறகு எங்கள் மின்னல் வேக கார் ஓட்டுனர் எடுத்த அதி பயங்கரமான over take க்கை கண்டு அந்த காரிலிருந்த என் நண்பனின் உயிர் நாடி!!!!!!! ஊசலாடியது போலிருக்கிறது :) :) :) :) . அவனை relax செய்வதற்காகவே வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் நான் சொல்ல போகிறேன் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட , இந்த ரகளையான பயணத்தில் கலந்து கொண்ட என் நண்பர்கள் இந்த விஷயத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும்படி கேட்டனர் :) :) :) ( அடுத்தவன் சங்கடத்தில் நம்ம ஆட்களுக்கு எப்பவுமே ஒரு இனம்புரியாத சந்தோசம் ) .
இதற்கிடையில் நம்ம ஆட்களுக்கு இசை ஆர்வம் பொங்கி வழிந்து ரோட்டிலேயே இசை கச்சேரி நடத்தும் அளவுக்கு Sound வைத்து பாட்டு கேட்க ஆரம்பித்துவிட்டனர் . என்னை போல் சிலர் போதும் இந்த கூத்து என்று கெஞ்சி கேட்டும் செவி சாய்க்காமல் தொடர்ந்து ..... ஒரு வழியாக அவர்களாகவே முடிவுக்கு வந்து மீண்டும் வண்டியை கிளப்பினர். ( இந்த திடீர் இசை ஆர்வத்துக்கு காரணம் காரிலிருந்து கிடைத்த ஒரு Disco song audio CD தான் ).

எப்படியோ மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம் .. .. ராயக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் எங்கள் முன் சென்ற மின்னல் வேக காரை over take செய்து விட்டோம் . இந்த அறிய செயலை செய்தது எங்கள் நண்பன் HULK ( அவரை நாங்கள் செல்லமாக இப்படித்தான் அழைப்போம் :):):) )
ராயக்கோட்டை தாண்டி பாப்பாரப்பட்டி ,பாலக்கோடு என்று எங்கள் பயணம் கொஞ்சம் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது . திடீரென்று பாலக்கோடு தாண்டி ஒரு ஹோட்டல் -ஐ பார்த்தவுடன் எங்களுக்குள் ஒரு சலசலப்பு ..அதற்க்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை ..நாங்கள் ஏற்கனவே ஒகேனக்கலுக்கு சென்றோம் என்று சொன்னேன் அல்லவா ..அப்போது இங்கேதான் Dinner சாப்பிட்டோம் , இந்த கடை கொத்து பரோட்டா அவ்வளவு அருமை .....

இப்படி அரட்டை அடித்துக்கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது ...திடீரென்று தான் எங்களுக்கு தோன்றியது கையில் Digital camera மற்றும் Handy cam கொண்டு வந்திருக்கிறோம் என்று ...அப்புறம் என்ன ...நாங்களும் PC Sreeram உடைய சீடர்கள் தான் என்று நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .....

எப்படியெல்லாம் நிரூபித்தோம் ..... யார்யாரோட மானம் கப்பல் ஏறியது என்பதை அடுத்து பாப்போம் .... :) :)

- தொடரும் ....

வெள்ளி, 6 நவம்பர், 2009

சச்சின் - ஒரு மாவீரன்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார் "It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"


2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."

நன்றி : நிலா ரசிகன் .

வியாழன், 5 நவம்பர், 2009

ஒகேனக்கல் - ஒரு ரகளையான பயணம் ..பாகம் -1

ஒகேனக்கல் சென்று வருவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல ..சில நாட்களுக்கு முன்பு Mystery minds -ல் இருக்கும் ஒரு காளை மாட்டு திருமணத்திற்கு செல்லும் வழியில் கிடைத்த சிறிது நேரத்தில் ஒகேனக்கல் சென்று இயற்கையை ரசித்துவிட்டு வந்தவர்கள் நாங்கள்.
" ( Mystery minds என்பது எங்கள் நண்பர்கள் குழுவின் பெயர் )"

அப்போதே நாங்கள் அனைவரும் திட்டம் தீட்டினோம் ..மீண்டும் ஒருமுறை இங்கு வந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பது என்று.அதற்கான நேரமும் வந்தது Master plan ஒன்று போட்டோம் ..நம்ம பசங்க plan போட்டா எந்த மாதிரி இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா ? ஆரம்பமே சொதப்பல் ..சிலர் அலுவல் காரணமாக வர இயலவில்லை .எப்படியோ கடைசியில் ஒன்பது பேர் ,இரண்டு மகிழுந்துகளில் ( கார்களில் ) செல்வது என்று தீர்மானம் போட்டு தயாரானோம் .

எங்களோட திட்டப்படி காலை 6 மணிக்கு புறப்படவேண்டும் .ஆனால் நாங்கள் எழுந்து ஆடி அசைந்து கிளம்ப நேரம் காலை 7.30 ஆகிவிட்டது .அப்பாடா... மணி 8-ஐ தொட்டதும் எங்கள் கார்கள் தெருவிலிருந்த புழுதியை வாரியிரைத்துக்கொண்டு கிளம்பியது. ( ஒருவேளை தெருவே எங்களை வேடிக்கை பார்த்திருக்களாம்.ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை ).ஒரு வழியாக Electronic சிட்டி - ஐ தாண்டி வண்டி போய்க்கொண்டிருக்கையில் பசங்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது .நம்ம பசங்க எதை வேண்டுமென்றாலும் பொறுத்து கொள்வார்கள் .பசி என்று வந்துவிட்டால் எல்லோரும் HULK -ஆக மாறி விடுவார்கள் .
அதனால் ஒரு நல்ல Hotel - ஆக பார்த்து நிறுத்தி ஆட்டைய போட்டுட்டு கிளம்ப தயாரானோம் .மணி சரியாக 9 -ஐ தொட்டிருந்தது .எல்லோரும் அவரவர் கார்களில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் புழுதியை கிளப்பினோம் . சரியா 1 கி .மீ கூட சென்றிருக்க மாட்டோம் மீண்டும் ஒரு நிறுத்தம் .இப்போது கார்களுக்கு பசி அதனால் அதற்கும் கொஞ்சம் எரிபொருள் போட்டுவிட்டு சபதம் ஏற்றோம் .

சபதம் என்றவுடன் பெரிதாக ஏதும் நினைத்து விடாதீர்கள் அடுத்த stopping ஓசூர் தாண்டித்தான் என்று சபதம் கொண்டோம் :) .
நம்ம பசங்க சபதம் போட்டா என்றைக்காவது நிறைவேற்றி இருக்கிறார்களா .....ஆமாம் இப்பொழு நீங்கள் நினைப்பதேதான் நடந்தது ..மீண்டும் ஒரு நிறுத்தம் ஆனால் இது கார் ஓட்டுனரை மாற்றுவதற்காக ( இந்த ஓட்டுனரை பற்றி சுருக்கமா சொல்லனும்னா இவர் குறுக்கு சந்துல கூட 100 Km வேகத்துல போகக்கூடியவர் .) ஓட்டுனர் மாறியதுதான் தாமதம் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் எங்கள் பார்வைலிருந்து மறைந்தது . நாங்கள் அடைப்புக்குறிக்குள் சொன்ன விளக்கத்தை எங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறி மாறி சொல்லிக்கொண்டு பின்னாலேயே பயணமானோம் .

அப்பாடா ஒரு வழியாக கர்நாடகா எல்லை தாண்டிவிட்டோம் . அடுத்து ஓசூர் தான் .எங்களுக்கு முன்னால் சீறி கொண்டு சென்ற கார் எங்களை வரவேற்க ஓசூர் எல்லையிலேயே நின்று கொண்டிருந்தது . இந்த முறை நாங்கள் யாரும் கீழிறங்க வில்லை . காருக்கு உள்ளிருந்தே ஒரு "ஹாய்" சொல்லிவிட்டு கிளம்பினோம் .

ஓசுரின் எல்லையை தாண்டியதும் ஒரு பெரிய குழப்பம் .இதை ஒரு பெரிய நாட்டாமையால் தான் தீர்க்கமுடியும் என்றாலும் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து கேட்டோம் . அந்த குழப்பம் வேறு ஒன்றும் இல்லை ஒகேனக்கலுக்கு எப்படி போறதுன்னுதான் :) :) :) .நாங்கள் ஏற்கனவே சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டதால் விசாரித்தோம் . ( நீங்கள் கடுப்பாவது தெரிகிறது ,அதனால் இன்றைக்கு இது போதும் . வேகமாக சென்ற காரில் இருந்த என் நண்பனுக்கு நேர்ந்த ஒரு அசௌகரியமான நிலையை பற்றி அடுத்து பார்ப்போம்.

( என்னடா இவன் இவ்வளவு மொக்க போடுறானே என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . ஏனென்றால் இது மிகவும் சுருக்கமாக ஆரம்பித்து சுருக்கமாக சொல்ல நான் முயற்சி செய்துகொண்டிருக்கும்
பயணக்குறிப்பு . எங்க ஆளுங்கள பத்தி சொல்ல ஆரம்பித்திருந்தால் இன்னும் நாம் Electronic city - வையே தாண்டி இருந்திருக்க மாட்டோம் . அதனால என் மேல் கடுப்பு கொள்ளாமல் இந்த இனிய பயண குறிப்பை படித்து மகிழவும் .இனிமேல் தான் Mystery minds -இன் உண்மையான அட்டகாசத்த பற்றி படிக்க போறீங்க :) :) )
- தொடரும் .....
இந்த தொடரைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .

புதன், 4 நவம்பர், 2009

திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தல், வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது... பாவம் திராவிடர் கழக கூடாரத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை வெறும் சாதி அளவில் மட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும், அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்.

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.

திராவிடர் கழகத்திற்கு நாம் பெரியாரின் கருத்துகளை விளக்க வேண்டிய கொடுமையை பாருங்கள்...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர், அதாவது வர்ணாசிரமத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளார், பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா? இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பேரியக்கமாச்சே இங்கே ஏன் இப்படி?

பெரியாரின் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை எதிர்க்கும் கொள்கைக்கு தான் திக தலைமை குழி தோண்டி புதைத்துவிட்டதென்றால் அதன் "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரியாரின் சுயமரியாதைக்கு பாடை கட்டியுள்ளனர்.

திரு.அன்புராஜ்க்கு பதவிபிரமாணம் செய்ய தலைமை முடிவெடுத்திருந்தாலும் திராவிடர் கழக "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்திருக்க வேண்டும், கழக தொண்டு, கழக பணிகள், அனுபவம், தியாகம், திறமை இவைகளையெல்லாம் தாண்டி திரு.அன்புராஜ் அதிகாரம்மிக்க பதவிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது இந்த திறமையான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இவர்களை எல்லாம் தகுதி குறைத்த செயல்தானே, இவர்களுடைய தகுதி குறைக்கப்பட்டது என்பது இவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதானே, இந்த மானமிகுகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும், தலைமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... மத நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிமைத்தனத்தையும் (அடிமைத்தனம் எந்த உருவத்தில் என்றாலும் பாசம், எஜமான விசுவாசம், மத நம்பிக்கை, காதல் என எந்த உருவத்திலும்) எதிர்த்த பெரியாரின் இந்த மானமிகு தொண்டர்கள் எந்த விசுவாசத்தின் அடிப்படையில் இதை சகித்துக்கொண்டுள்ளார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் போடும் கருப்பு சட்டைக்கும் "மானமிகு" அடைமொழிக்கும் பொருள் புரிந்து தான் போடுகிறார்களா? அல்லது இவர்களும் காவி உடுத்தி பெயரின் முன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜல்சானந்தா சுவாமிகள் என்று போடுவது போல கருப்பு சட்டையையும் "மானமிகு" அடைமொழியையும் பயன்படுத்துகிறார்களா என்று புரியவில்லை.

தலைப்பு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் பார்பனீயத்தையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்து திக வினர் வெளியிட்ட கட்டுரைகளின் தலைப்புகளின் கடுமையை பார்க்கும்போது இந்த தலைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை.

- நன்றி : குழலி பக்கங்கள் .

பேராண்மை - திரை விமர்சனம்

நடிப்பு - ஜெயம் ரவி, தன்ஷிகா, காதல் சரண்யா, வசுந்தரா, லியாஸ்ரீ, வர்ஷா, பொன்வண்ணன், ரோலன்ட் கிக்கிங்கர், வடிவேலு.

இசை - வித்யாசாகர்

இயக்கம் - எஸ்.பி.ஜனநாதன்

தயாரிப்பு- கருணா மூர்த்தி, அருண்பாண்டியன்

இந்தியா அனுப்ப இருக்கும் செயற்கைகோளை அழிக்க வரும், சர்வதேச கூலிப்படை கும்பலை ஐந்து மாணவிகள் உதவியுடன் தீர்த்துகட்டும் இளைஞனின் கதை.


அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு கிராமமாக வசிக்கும் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் ஜெயம் ரவி பல்கலையும் படித்து அதே பகுதியில் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., பயிற்சிக்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணிக்கு ரவியை நியமிக்கிறார் வனத்துறை அதிகாரி பொன்வண்ணன். அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவிகள். கூடவே மேல் அதிகாரியிடம் மாட்டி விட்டு இம்சை படுத்துகின்றனர்.

அந்த பட்டாளத்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களில் ஐந்து பேரை காட்டுக்கு அழைத்துப் போகிறார் ஜெயம் ரவி. அப்போது நவீன எந்திர துப்பாக்கிகளுடன் வெள்ளைக்காரர்கள் போவதை ஒரு மாணவி பார்த்து ரவியிடம் சொல்கிறாள். அவர்கள் விவசாயத்துக்காக இந்தியா அனுப்ப உள்ள ராக்கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் கூலிப்படை என்பதை புரிந்து கொள்கிறார் ஜெயம் ரவி. உடனே அவர்களை அழிக்க புறப்படுகிறார்.

மாணவிகளும் தேசத்தை காப்பாற்ற நாங்களும் வருவோம் என பிடிவாதம் செய்து ஜெயம் ரவியுடன் செல்கின்றனர். மாணவிகளின் உதவியோடு கூலிப்படையினரின் சதியை ரவி எப்படி முறியடிக்கிறார்? என்பது க்ளைமாக்ஸ்.
காதல் நாயகனாக வலம்வந்த ஜெயம் ரவி, ஆக்ஷன் நாயகனாக கண்ணில் வெறியையும், தோற்றத்தில் முரட்டுத்தனத்தையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பேராண்மையில். உடம்பு இளைத்து, மிலிட்டரி கெட்-அப்பில் சும்மா மிரட்டியிருக்கும் ஜெயம் ரவி, சாதி ரீதியாக உயர் அதிகாரியும், மாணவிகளும் இழிவுபடுத்துவதை சகிப்பது... மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் துறுதுறுப்பு என நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஜெயம் ரவியை பயிற்சியாளர் பணியிலிருந்து விரட்ட வசுந்தரா, தன்ஷிகா கூட்டணி போடும் திட்டங்கள் திடுக். அதற்காக, நிர்வாண வாக்கிங் எல்லாம் ஓவர். செக்கிங் பாயின்ட்டில் நிற்கும் ஜீப்பை எடுத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கும் ஐந்து நாயகிகளும் முதல் பாதியில் வில்லிகளாகவே மாறிவிடுகின்றனர்.

நாயகன்களுக்கு சமமாக நாயகிகளும் ஆக்ஷனில் பாய்வதால் படத்தில் ஆறு நாயகன் என சொல்லுமளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள். காதல் சரண்யாவின் மனதுக்குள் உறங்கும் காதலும், அவர் கண்கள் பேசும் வார்த்தைகளும் யதார்த்தம்.


ஐந்து புதுமுகங்களில் ஓரிருவர் தவிர மற்ற நாயகிகள் ஆங்காங்கே ஒருசில படங்களில் பார்த்த முகங்கள் என்றாலும் இதில் பாத்திரம் உணர்ந்து நடித்து பலே சொல்ல வைத்திருக்கிறார்கள். ஊர்வசி, பொன்வண்ணன், கையால் நடந்து வரும் குமரவேலு என அனைவரும் கதைக்கேற்ற தேர்வு.
கல்லூரி பியூனாக வந்து நாயகன் ஜெயம் ரவிக்கு ஆதரவாக பேசி அடிக்கடி பொன்வண்ணன் மற்றும் அவரது டீமிடம் அடியும் உதையும் வாங்கிக் கொள்ளும் வடிவேலுவின் காமெடி வழக்கம்போலவே செம கலாட்டா. மாணவிகளின் நிர்வாண கதையை கேட்டு, நள்ளிரவு 12 மணி வரை உறங்காமல் இருக்க வடிவேலு முயற்சிப்பது கிக் காமெடி.

சிக்ஸ் பேக் ஹாலிவுட் வில்லன் ரோலன்ட் கிக்கிங்கர் தனது உடலைப் போலவே கேரக்டருக்கும் உரமேற்றுகிறார். படத்தின் பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம்.
மாணவிகளுடன் காட்டுக்குள் நுழைந்ததும் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறுகின்றன. இரு வெள்ளைக்காரர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரவேசமானதும் பெரிய விபரீதம் நடக்கப்போகும் திகில்... மலைக்குன்றுகளை கடந்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் போது பதினாறு பேர் அணி வகுத்து வருவது திக்... திக்... நோட்டம் பார்க்க முன்னால் வரும் நான்கு தீவிரவாதிகளை மரத்தின் உச்சியில் இருந்து ஜெயம் ரவி கொல்வது மிரட்சி. ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என மாணவிகளுடன் சேர்ந்து அடிக்கடி அவரது ஜாதியை சொல்லி கீழ்த்தரமாக நடந்து கொண்டு, அவரது கிராமத்தையே காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவியின் சாகசங்களையெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஜனாதிபதியிடம் க்ளைமாக்ஸ’ல் விருது பெறுவது கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களுக்கு சரியான சவுக்கடி.


பொன்வண்ணன் மாதிரியே ஒவ்வொரு கேரக்டர் மூலமும் இயக்குனர் தனக்கு தெரிந்த முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிசத்தையும், சித்தாந்தத்தையும் புகுத்தி புரட்சி செய்திருப்பது புதுமை.
இயக்குனர் ஜனநாதன் காட்சிக்கு காட்சி தனது பாத்திரங்கள் மூலமும், சமூக அவலங்களை வசனமாக்கி அதன் மூலம் தெரிவது போன்றே, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமார், எடிட்டர் விஜயன் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க தங்களை பளிச்சென வெளிப்படுத்திருக்கிறார்கள்.


ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரின் மலைவாழ் குடிசை செட், செயற்கைகோள், ராணுவ ஆயுதங்கள் கனக் கச்சிதம்.

பேராண்மை - கம்யூனிச சிந்தனைகளுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படம்.

நாட்டு நடப்பு

மாற்று பாதையில் சேது சமுத்திர திட்டம் சாத்தியமா?
டிசம்பர் 11 - ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு .

செவ்வாய், 3 நவம்பர், 2009