செவ்வாய், 7 டிசம்பர், 2010

அரங்கநாதரையும் வரலட்சுமியையும் இப்படியா அவமானப்படுத்துவது? – கமலுக்கு கண்டனம்

சினிமா பாடலில் அரங்கநாத சுவாமியையும், வரலட்சுமி தேவியையும் கேவலப்படுத்தி எழுதியுள்ளார் கமல் என கண்டனக் குரல் எழுந்துள்ளது.

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் மிகவும் அறுவறுக்கத்தக்கதாகவும் ஆபாசமாகவும் உள்ளதாகவும், இதில் அரங்கநாதர் மற்றும் வரலட்சும் ஆகிய தெய்வங்களை தேவையின்றி இழிவுபடுத்துவதாகவம் கூறி, இந்து மக்கள் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, இயக்குனர் ரவிக்குமார், ஹீரோ கமல்ஹாஸன், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்குஇந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணன்.

அந்த நோட்டீஸில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடல், இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையச் செய்துள்ளது.

நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டப்போரைச் சந்திக்க வேண்டி வரும்”, என்று கூறியுள்ளார்.

நன்றி : நெருடல் இணையம்

செவ்வாய், 9 நவம்பர், 2010

கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !

விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?

1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.

2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.

3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்

குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?

4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்

1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.

கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!

எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்

3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?

இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?

ஆகமவிதி கோவி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கறையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.

நன்றி : காலம்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர்

இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.

ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.

அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:

ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?

''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.

புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.

திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.

சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''

ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?

''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் [^] பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.

தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''

சீமானின் போராட்டம் [^] அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.

ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசு [^]க்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் [^] இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.

ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?

பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''

உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?

''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?

'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.

அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!

மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.

அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''

சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?

''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''

லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?

''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.

இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''

நன்றி- தட்ஸ் தமிழ் 

திங்கள், 12 ஜூலை, 2010

விடாது செம்மொழி!

மழை விட்டும் தூவானம் விடாதகுறையாக, செம்மொழி மாநாடு முடிந்தபிறகும் இன்னமும் அது தொடர்பான சர்ச்சைகளிலும் சாகசங்களிலும்தான் தமிழக அரசியல் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது. ‘கருணாநிதி போர்க் குற்றவாளி’ என்று ஜெயலலிதா கொதிக்க, ‘ஈழப்பிரச்னைக்காக பதவியை ராஜினாமா செய்தவன் நான்’ என ஃபிளாஷ்பேக் நினைவுகளில் மூழ்கினார் முதல்வர் கருணாநிதி. இதற்கிடையே செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழக அரசு சில முடிவுகளையும் எடுத்திருக்கிறது. இதற்கான கூட்டத்தில் முதல் வேலையாக முதல்வரைப் பாராட்டி தீர்மானம் போட்டுவிட்டுத்தான் அடுத்த தீர்மானங்கள் பற்றியே யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பொருட்காட்சி மைதானத்தில் தொலைந்த குழந்தை போல, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி தொலைந்து போய் விட்டிருந்தது. பழம்பெருமை பேசியே நிகழ்காலச் சிக்கல்களை மறக்கடித்துவிடும் சாமர்த்தியம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை! அப்படி தமிழர்களின் பழம்பெருமைகளை சுட்டிக்காட்டும் ‘இனியவை நாற்பது’ ஊர்வலமும், கண்காட்சி அரங்கும் தமிழர்களை பரவசப்பட வைத்து, ஈழச் சிக்கல்களை மறக்கச் செய்தது. வாலியும் வைரமுத்துவும் நா.முத்துகுமாரும் செம்மொழி நாயகனைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், இலங்கையில் முக்கியமான பல சம்பவங்கள் நடந்தேறின. ஈழ மண்ணில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்தது. ‘ஐ.நா. அமைப்பு இப்படி ஒரு குழுவை நியமித்தது சட்டவிரோதமானது. எங்கள் நிர்வாகத்தில் குறுக்கிட அவர்கள் யார்? இந்தக் குழுவில் இருக்கும் யாருக்கும் விசா தரமாட்டோம்’ என்று கொதித்தது இலங்கை அரசு. ஐ.நா. அமைப்பை கண்டித்து ராஜபக்ஷே கட்சியின் சார்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க, ஒரு அமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலகத்தைத் தாக்குவதில் தவறில்லை’ என்றுகூட பேசினார்.
‘இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது நுடுல்ஸ் தயாரிப்பது போல சில நிமிட வேலை கிடையாது. அதற்கென நாங்கள் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வோம்’ என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளிப்படையாகவே சொன்னார். இந்நிலையில், செம்மொழி மாநாட்டின் சாரலாக, இலங்கை பிரச்னைக்காக மீண்டும் ஒருமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டு அழைப்பிதழைக்கூட முதல்வர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தார். செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ் முக்கியம்; இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கடிதம் சாதாரணமானதா?

மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் முக்கியமானவை; தமிழின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துச் சொல்லும் புதிதான ஆய்வுகள், நவீன காலத்துக்கு ஏற்றவகையில் தமிழில் செய்யவேண்டிய மாற்றங்கள், பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரவேண்டியவை என்னென்ன?, கணினி பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழுக்கு என்ன செய்யவேண்டும்... இப்படியான முடிவுகளை எடுக்க அடிகோலும் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் முக்கிய இடம்பிடிக்க வேண்டும். 380 கோடி செலவிடப்பட்ட செம்மொழி மாநாட்டில் எண்ணூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் படிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வரங்குகளில் கூட்டமே இல்லை. படித்த கட்டுரைகள் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை!
தமிழின் சிறந்த நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழி நூல்களை தமிழில் கொண்டுவரவும் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதும், யூனிகோட் எழுத்துரு பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்புமே இந்த மாநாட்டால் நடந்த உருப்படியான விஷயங்கள். ஆனாலும், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர நினைக்கும் இந்த அரசு, தமிழில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருப்படியாக உருவாக்கி வைத்திருக்கிறதா என்பதை மனசாட்சியோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்விகளை தமிழில் படிக்க வேண்டும் என்றால் அதற்கான புத்தகங்களே இல்லை; தரமான புத்தகங்களை மொழிபெயர்க்க இதுவரை நடந்த எந்த முயற்சிக்கும் அரசின் ஆதரவு இல்லை. பள்ளி பாடப் புத்தகங்கள் தமிழில் இருந்தாலும், சகல வசதிகளும் அரசு பள்ளிகளில் இருந்தாலும், தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை தருகிற ஒரு சூழ்நிலை அந்தப் பள்ளிகளில் இல்லை என்பதை யாராவது மறுக்கமுடியுமா? தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு ‘தரமான கல்வியைத்தான் பெறுகிறோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மரபணுப்பூங்கா, செம்மொழிப் பூங்கா என கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தமிழை வளர்த்துவிடாது. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகத் தலைவர்கள் அதற்கான ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். முல்லைபெரியாறு அணைக்காக பிரதமரைச் சந்திக்க கேரளத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து செல்வார்கள். தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அப்படிச் செல்வதை யாராவது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியுமா?

உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர விரும்பினாலும் அதற்கு எளிய எழுத்துப் பயிற்சிகளைக் கொண்ட முழுமையான புத்தகங்கள் கிடைப்பதில்லை; தமிழின் தாய்பூமியான இங்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இன்னும் படிக்கப்பட்டாத கல்வெட்டுகளிலும், இடிந்துகிடக்கும் ஏராளமான கோயில்களிலும் தமிழகத்தின் & தமிழனின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.அழிவிலிருந்து அதை மீட்க வேண்டும்.

உண்மையில் இதையெல்லாம் செய்வதற்கு செம்மொழி மாநாட்டுக்கு ஆன செலவைவிட அதிகம் ஆகிவிடாது; தேவை, நிஜமான அக்கறை மட்டுமே!

நன்றி : தெனாலி

வெள்ளி, 18 ஜூன், 2010

ராவணன் - விமர்சனம்



சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.


திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா - தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா...). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.
 
வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.

முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.

வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.
 
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.


ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.

அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.


மணிரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.
 
- நன்றி : தெனாலி

ஞாயிறு, 13 ஜூன், 2010

புரட்சியின் மறுபெயர் "சே"

 
புரட்சியின் அடையாளம் சே குவேரா , வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.

இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே,சிறு வயதிலிருந்தே அநீதியை கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார்.பணக்காரக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் தோழனாக இருந்தவர்.

அமெரிக்க முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே- வின் வாழ்கையை திசை மாற்றியது .முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தார்.இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார்.

முதலாளித்துவ அமெரிக்காவின் கீழ் இருந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தும் என நம்பினார் "சே".
 

அர்ஜென்டீனாவில் பிறந்த சே கியூபா பரட்சி வெற்றி பெற களம் இறங்கினார், அமெரிக்கா ஸ்தம்பித்தது, காஸ்ட்ரோ குவேராவை தன் நம்பிக்கையான தளபதியாக கருதினார்.மக்கள் சக்தி கியூபா வில் வெற்றி பெற்றது,சே விற்கு அமைச்சர் பதவி வழங்கினார் காஸ்ட்ரோ.

கொஞ்ச காலத்தில் அமைச்சர் பதவியை துறந்து காங்கோவின் விடுதலைக்கு போராட ஆப்ரிக்காவிற்கு சென்றார் ,அங்கிருந்து பொலீவிய நாட்டு விடுதலைக்காக போராடினார்.

சே வை விடாமல் துரத்தியது அமெரிக்க சி ஐ எ , கொரில்லா வீரர்களுடன் கடும் போர் ஏற்பட்டது,அங்குதான் சே சுட்டுக் கொள்ளப் பட்டார் .கலங்கினார் காஸ்ட்ரோ தன் ஒரு கையை இழந்தது போல் துடித்தார்,இன்று வரை அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ.
 

"அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே " - சே குவேரா

இன்று சே வின் பேத்தியான லிடியா குவேராவும் ஒரு புரட்சிக்காரர் தான்,பசுமையை நோக்கி புரட்சி செய்கிறார் இந்த பெண் குவேரா
புரட்சி தொடரும்................

புதன், 5 மே, 2010

உறையவைக்கும் உலக உதாரணங்கள்

பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டான ராணா என்பவருக்கு இந்திய ரகசியங்களை உளவுபார்த்துக் கொடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பைத் தொடர்ந்து, 'வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி எழ... அதைப்பற்றிய ஓர் அலசல் இங்கே.

தங்கள் பெயர் வெளியிட விரும்பாமல் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சிலர், நம்மிடம் சொன்ன தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்!

''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு

அதிகாரிகளாகச் செல்வது உயர் வானது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்வது தாழ்வானது, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வது சுமார் என அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. தூதரகங்களில் நல்ல போஸ்ட்டிங் கிடைக்க மலையாளியாக இருக்க வேண்டும் அல்லது மாமூல் வெட்ட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போஸ்ட்டிங் போட சில கோடிகள். கனடா என்றால் 50 லட்சம் வரை மாமூல் என கப்பம் கட்டுவார்கள். இதைக் கொடுத்தவர்கள் திரும்ப எடுப்பது எப்படி? விதிமுறைகளை மீறி ஒரு விசா வழங்க, 5,000 டாலர் கள் வாங்குகிறார்கள்.. புதிய பாஸ்போர்ட் பெற 2,000 டாலர்கள் என்று மேலைநாடுகளில் வசூல் வேட்டை நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களும் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் வேலை செய்த கன்னட இளைஞர் ஒருவர், இரண்டே வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சுருட்டி இருக்கிறார். அமெரிக்க உளவுத் துறையும் இந்தியத் தூதரகமும் கூட்டாகச் சேர்ந்து அவரைக் கைது செய்வதற்கு முன்பு சென்னைக்கு தப்பி வந்து, வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். அனைவரும் இப்படி அயோக்கியர்கள் அல்ல. ஒரு சிலர்தான் இப்படி இருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் செலவு வைப் பார்கள். இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊர் சுற்றிப் பார்க்க சொகுசு கார், ஸ்பெஷல் சாப்பாடு, ஏராளமான பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த விஸ்கி என்று 10 ஆயிரம் டாலர்கள் வரை செலவு வைத்தால், அந்த தூதரக அதிகாரி எங்கேதான் போவார்?

இதில் பல அமைச்சர்கள், தங்கள் தோழிகளையும் கூடவே ரகசியமாக அழைத்து வந்து வெளிநாடுகளில் 'அரசுமுறைப் பயணத்தில்' லூட்டி அடிப்பார்கள். அரசாங்கக் கணக்கில் காட்ட முடியாததால் தூதரக அதிகாரிகளே ஹோட்டல் ரூம் முதல், அவர்களின் மேக்கப் செலவு வரை அழுதாக வேண்டும். இல்லா விட்டால், 'அடுத்த போஸ்ட்டிங் ஆப்பிரிக்க நாடுதான்' என்று மிதமான மிரட்டல் வரும்!

குடும்பத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு போஸ்ட் டிங் போகிறவர்கள், மூன்று வருடம் பணி முடித்து வேறு நாட்டுக்கு மாற்றலாகிச் செல்லும்போது தங்கள் மனைவி, குழந்தைகளை, அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். அவர்கள் குடும்பம் மெள்ள மெள்ள அங்கே செட்டில் ஆகிவிட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ்ஸில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் மாற்ற லாகிப் போனாலும் அவர்கள் குடும்பம் மேல் நாட்டில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுப்பது எது? வேலை செய்யும்போதே பல்வேறு ரகசியங்களைக் கூறுவதால் தங்க அனுமதி கொடுத்து பணமும் கொடுக்கிறதா அயல்நாட்டு அரசாங்கங்கள்? அல்லது பாஸ்போர்ட், விசா வழங் குவதற்கு பெறப்படும் லஞ்சமா?'' என்று கேள்வி எழுப்பியவர்கள், தொடர்ந்தனர்.

''மூன்று வருடங்களுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ... அவ்வளவும் சுருட்டுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக மத்திய அரசு எடுக்கும் வலுவான நடவடிக் கைகளால் இவர்கள் ஆட்டம் சற்றே அடங்கி இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் ஹேட்லிக்கு சிகாகோ துணைத் தூதரகம் விசா வழங்கிய பிறகு ஒவ்வொரு வழக்கும் அலசி ஆராயப்படுகிறது. மேலைநாடுகளில் இந்தியத் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் வேலை செய்பவர்கள் அனை வரும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவது இல்லை. லோக் கலாகவும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் தரப்படும். ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெறும் உள்ளூர் கிளார்க்குகள், விசா மற்றும் பாஸ்போர்ட் ஊழியர்கள் பாடு மிக திண்டாட்டம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாத சம்பளத்தில் வேலை செய்யும் உள்ளூர் ஊழியர்கள் சிலர், வார விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து தகுதியற்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு விசா, பாஸ்போர்ட் கொடுத்ததையும் மத்திய அரசு கண்டுபிடித்தது.

ஒவ்வொரு தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களிலும் உளவுத் துறையாக 'ரா' அமைப்பின் அதிகாரி ஒருவர் மஃப்டியில் வேலை செய்வார். உளவு பார்ப்பதற்காக அவருக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படும். இந்தத் தொகையை அந்த அதிகாரி தனக்கு செய்தி தருபவர்களுக்குக் கொடுப்பார். அமெரிக்காவில் மிகப் பிரபலமான நகரில் இருந்த 'ரா' உயர் அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு வைர வளையல், புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்து அதை 'சோர்ஸ்'க்கு கொடுத்ததாகக் கணக்கில் காட்டினார். 'தூதரகங்களில் வேலை செய் பவர்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் அதிகம் பழகக் கூடாது. அதன் மூலமாக அரசாங்க ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு உண்டு' என்று புதிய அரசு 'சர்க்குலர்' அனுப்பியும் வெள்ளைக்கார அழகிகளுடன் சுற்றும் இந்திய உயர் அதிகாரிகள் உண்டு. இதன் மூலம்தான் அரசு ரகசியங்கள் 'லீக்' ஆவதாக பலமான பேச்சு உண்டு.



பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டான ராணா என்பவருக்கு இந்திய ரகசியங்களை உளவுபார்த்துக் கொடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பைத் தொடர்ந்து, 'வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி எழ... அதைப்பற்றிய ஓர் அலசல் இங்கே.

தங்கள் பெயர் வெளியிட விரும்பாமல் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சிலர், நம்மிடம் சொன்ன தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்!

''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு

அதிகாரிகளாகச் செல்வது உயர் வானது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்வது தாழ்வானது, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வது சுமார் என அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. தூதரகங்களில் நல்ல போஸ்ட்டிங் கிடைக்க மலையாளியாக இருக்க வேண்டும் அல்லது மாமூல் வெட்ட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போஸ்ட்டிங் போட சில கோடிகள். கனடா என்றால் 50 லட்சம் வரை மாமூல் என கப்பம் கட்டுவார்கள். இதைக் கொடுத்தவர்கள் திரும்ப எடுப்பது எப்படி? விதிமுறைகளை மீறி ஒரு விசா வழங்க, 5,000 டாலர் கள் வாங்குகிறார்கள்.. புதிய பாஸ்போர்ட் பெற 2,000 டாலர்கள் என்று மேலைநாடுகளில் வசூல் வேட்டை நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களும் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் வேலை செய்த கன்னட இளைஞர் ஒருவர், இரண்டே வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சுருட்டி இருக்கிறார். அமெரிக்க உளவுத் துறையும் இந்தியத் தூதரகமும் கூட்டாகச் சேர்ந்து அவரைக் கைது செய்வதற்கு முன்பு சென்னைக்கு தப்பி வந்து, வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். அனைவரும் இப்படி அயோக்கியர்கள் அல்ல. ஒரு சிலர்தான் இப்படி இருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் செலவு வைப் பார்கள். இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊர் சுற்றிப் பார்க்க சொகுசு கார், ஸ்பெஷல் சாப்பாடு, ஏராளமான பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த விஸ்கி என்று 10 ஆயிரம் டாலர்கள் வரை செலவு வைத்தால், அந்த தூதரக அதிகாரி எங்கேதான் போவார்?

இதில் பல அமைச்சர்கள், தங்கள் தோழிகளையும் கூடவே ரகசியமாக அழைத்து வந்து வெளிநாடுகளில் 'அரசுமுறைப் பயணத்தில்' லூட்டி அடிப்பார்கள். அரசாங்கக் கணக்கில் காட்ட முடியாததால் தூதரக அதிகாரிகளே ஹோட்டல் ரூம் முதல், அவர்களின் மேக்கப் செலவு வரை அழுதாக வேண்டும். இல்லா விட்டால், 'அடுத்த போஸ்ட்டிங் ஆப்பிரிக்க நாடுதான்' என்று மிதமான மிரட்டல் வரும்!

குடும்பத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு போஸ்ட் டிங் போகிறவர்கள், மூன்று வருடம் பணி முடித்து வேறு நாட்டுக்கு மாற்றலாகிச் செல்லும்போது தங்கள் மனைவி, குழந்தைகளை, அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். அவர்கள் குடும்பம் மெள்ள மெள்ள அங்கே செட்டில் ஆகிவிட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ்ஸில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் மாற்ற லாகிப் போனாலும் அவர்கள் குடும்பம் மேல் நாட்டில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுப்பது எது? வேலை செய்யும்போதே பல்வேறு ரகசியங்களைக் கூறுவதால் தங்க அனுமதி கொடுத்து பணமும் கொடுக்கிறதா அயல்நாட்டு அரசாங்கங்கள்? அல்லது பாஸ்போர்ட், விசா வழங் குவதற்கு பெறப்படும் லஞ்சமா?'' என்று கேள்வி எழுப்பியவர்கள், தொடர்ந்தனர்.

''மூன்று வருடங்களுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ... அவ்வளவும் சுருட்டுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக மத்திய அரசு எடுக்கும் வலுவான நடவடிக் கைகளால் இவர்கள் ஆட்டம் சற்றே அடங்கி இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் ஹேட்லிக்கு சிகாகோ துணைத் தூதரகம் விசா வழங்கிய பிறகு ஒவ்வொரு வழக்கும் அலசி ஆராயப்படுகிறது. மேலைநாடுகளில் இந்தியத் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் வேலை செய்பவர்கள் அனை வரும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவது இல்லை. லோக் கலாகவும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் தரப்படும். ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெறும் உள்ளூர் கிளார்க்குகள், விசா மற்றும் பாஸ்போர்ட் ஊழியர்கள் பாடு மிக திண்டாட்டம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாத சம்பளத்தில் வேலை செய்யும் உள்ளூர் ஊழியர்கள் சிலர், வார விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து தகுதியற்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு விசா, பாஸ்போர்ட் கொடுத்ததையும் மத்திய அரசு கண்டுபிடித்தது.

ஒவ்வொரு தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களிலும் உளவுத் துறையாக 'ரா' அமைப்பின் அதிகாரி ஒருவர் மஃப்டியில் வேலை செய்வார். உளவு பார்ப்பதற்காக அவருக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படும். இந்தத் தொகையை அந்த அதிகாரி தனக்கு செய்தி தருபவர்களுக்குக் கொடுப்பார். அமெரிக்காவில் மிகப் பிரபலமான நகரில் இருந்த 'ரா' உயர் அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு வைர வளையல், புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்து அதை 'சோர்ஸ்'க்கு கொடுத்ததாகக் கணக்கில் காட்டினார். 'தூதரகங்களில் வேலை செய் பவர்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் அதிகம் பழகக் கூடாது. அதன் மூலமாக அரசாங்க ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு உண்டு' என்று புதிய அரசு 'சர்க்குலர்' அனுப்பியும் வெள்ளைக்கார அழகிகளுடன் சுற்றும் இந்திய உயர் அதிகாரிகள் உண்டு. இதன் மூலம்தான் அரசு ரகசியங்கள் 'லீக்' ஆவதாக பலமான பேச்சு உண்டு.

அமெரிக்காவில் ஒரு பெரிய நகரத்தில் வேலை செய்த இந்தியச் செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் உளவாளியாக இருந்தார். பிளவுபடாத பாகிஸ்தானில் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்த அவர், தன்னை பாகிஸ்தானி என்றே சக நிருபர்களிடம் கூறி வருவார். இந்திய அமைச்சர்கள் இங்கு வரும்போது சென்சிட்டிவ்வான கேள்விகளுக்குப் பதில் பெற்று அந்த டேப்பை அப்படியே அருகில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சேர்ப்பித்துவிடுவார். அவர் இறக்கும் வரை தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. காரணம், அரசியல் பிரஷர்தான். இவருக்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அனைவரும் நல்ல நண்பர்கள்!'' என்று முடித்தனர்.

'தாய் மண்ணே வணக்கம்' என்று நல்ல நாட்டுப் பற்றுடன் இருப்பவர்களை சரியாக அலசித் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்புவதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

- சூரியன்

திங்கள், 3 மே, 2010

ஹமாம் சோப்பும் ஒரு கூடை அழுக்கும்

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது.

தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர் ஹமாம் சோப் விளம்பரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கட்டுரையின் ஹமாம் சோப்பு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.


தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ஹமாம் சோப் விளம்பரக் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையை கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பன குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோட விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விலையாடிககொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்ல இந்த சந்தேகம் எல்லாம் எங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை அடித்தபடி அவர் இப்படி சொல்கிறார்: “ஆட்டோவில் அந்த குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதை சொல்லும் போது அவர் கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.”

இப்படி நீள்கிறது அந்த கட்டுரை. என்னுடைய அதிர்ச்சிக்கு காரணம், அந்த விளம்பரம் மட்டும் அல்ல எனது சுரணையும்தான். அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன். அந்த விளம்பரத்தில் அந்த மனிதர் சொல்வது ‘கண்ட குழந்தைகளையா அல்லது அந்த குழந்தைகளையா’ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். கண்ட குழந்தைகள் என்று சொன்னாலும் அது அப்பட்டமான சாதி வெறியே. ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார். மீனா மயில் எழுதியிருப்பது போல அருவருப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு சோப் விளம்பரத்தில் இவ்வளவு அப்பட்டமான சாதிய வெறியும் உள்ள அழுக்கும் வெளிப்படுமா என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட விளம்பரங்களையும் பொருட்களையும் நாம் புறக்கணிக்காத வரையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. எப்போதும் பனியன் அணிந்த பகட்டான தோற்றம் கொண்ட மேல்சாதி பிரதிநிதி யாராவது நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் நமது வீடுகளுக்கு வந்து தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்?

http://neerottam.wordpress.com/

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

நளினி சிறுகச் சிறுகச் சித்ரவதை!

ராஜீவ் கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அதைக் காரணம் காட்டி நளினியை சிறுகச் சிறுகக் கொலை செய்வது நியாயமாகாது. வாழும் நீதிமான்களில் மிக மூத்தவரான வி.ஆர்.கிருஷ்ணய்யர், 'ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு' என்று தனது தீர்ப்புகளில் அடிக்கடி குறிப்பிடுவார். நீதியரசர்கள் சொல்வதைவிட 'கூட்டணி தர்மங்கள்'தான் இங்கு எல்லாப் பிரச்னைகளையும் தீர்மானிக்கின்றன. எனவேதான், வீட்டுக்கும் வர முடியாமல் சிறையிலும் நிம்மதியாக இருக்க முடியாமல் அந்தரத்தில் அல்லாடுகிறது நளினியின் வாழ்க்கை!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், உடலில் வெடிகுண்டு தாங்கிய தனு என்ற பெண்ணால் கொலை செய்யப்பட்டார். கைதான 26 பேருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதியானது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர், நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 'ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தானே. அதன் பிறகும் என்னை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?' என்று நளினி கேள்வி எழுப்புகிறார். நளினியை விடுவிக்க முடியாது என்று சிறை ஆலோசனைக் குழு சொன்னதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய சிக்கலுக்குக் காரணம் இதுதான்!

''அன்னை சோனியா காட்டிய கருணையால்தான் நளினியின் தூக்குத் தண்டனையே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் மீண்டும் கிளப்புவது நளினிக்கு அனுதாபம் தேடும் முயற்சியே. ராஜீவ் கொலையை நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது'' என்று சொல்லும் காங்கிரஸ் பேச்சாளர் கோபண்ணா, ''சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு அதன் போக்கிலேயே விட வேண்டுமே தவிர, இதைப் பிரசாரமாக்கக் கூடாது'' என்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால், 14 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது சரியானது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்குமானால், ஆயுள் முழுக்கச் சிறையில்தான் இருந்தாக வேண்டும். இது இன்று இருக்கும் சட்ட யதார்த்தம். நளினி தன்னுடைய தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றத்தில்வைத்து அவர்களது பரிசீலனைக்கு தனது வழக்கைக் கொண்டுபோகலாம்'' என்று சொல்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி-யான வைகுந்தும் இவரது கருத்தையே வழிமொழிகிறார். ''ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்று கறாரான வரையறை இல்லை. ஆயுள் தண்டனை என்பதன் அர்த்தம் ஆயுள் முழுக்கத் தண்டனையை அனுபவிப்பதுதான். நளினியைப் பொறுத்தவரையில் அவர் ஒரு முக்கியக் குற்றவாளியாக இருப்பதால், இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து முறையான தீர்ப்பைத் தரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்'' என்கிறார் வைகுந்த்.

'நளினி தொடர்புடைய குற்றம் கொடூரமானது. ராஜீவ் உள்ளிட்ட 18 பேர் கொலை செய்யப்படக் காரணமான சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக அவர் செயல்பட்டுள்ளார்' என்பதை முக்கியக் காரணமாகச் சொல்லி, நளினியின் முன்விடுதலையை நிராகரித்துள்ளது தமிழக அரசு. 'ராஜீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது. இந்திய அரசைத் திகைக்கச் செய்வதோ அல்லது இந்திய மக்களிடம் அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க ஆதாரம் இல்லாததால் தடா சட்டப் பிரிவுகள் இதற்குப் பொருந்தாது. சதிகாரர்களில் எவரும் ராஜீவ் காந்தியைத் தவிர, வேறு எந்த இந்தியரின் சாவையும் விரும்பியதற்குச் சான்று ஏதும் இல்லை' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் வெளிப்படையாகச் சொன்ன பிறகு, அதே காரணத்தைச் சிறை ஆலோசனைக் குழு கூறுவதும் அதைத் தமிழக அரசு ஏற்பதும் வழக்கை மீண்டும் பின்நோக்கிக் கொண்டுசெல்லும் காரியமாகத்தான் இருக்கிறது.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ''நளினி விடுதலையானால் குடியிருக்கப் போகும் ராயப்பேட்டை பகுதியின் இன்ஸ்பெக்டர் மட்டும்தான் நளினியை உறுதியாக விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார். அந்தப் பகுதியில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், தலைவர்களின் வீடுகள், அமெரிக்கத் தூதரகம் இருக்கின்றன. அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறார். நளினியின் அம்மாவும் தம்பியும் அந்தப் பகுதியில்தான் 12 ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கு இருப்பதே யாருக்கும் தெரியாத மாதிரி அமைதியாகத்தான் காலத்தைக் கழிக்கிறார்கள். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கொலை வழக்கு குற்றவாளிகள் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று இருக்கிறது. முன் விடுதலை செய்யும்போது சிறை ஆலோசனைக் குழு, சம்பந்தப்பட்டவர் சிறையில் ஒழுங்காக இருந்தாரா, இவரை வெளியில் விடுவதால் இவரது உயிருக்கு ஆபத்து அல்லது இவரால் மற்றவர் உயிருக்கு ஆபத்து உண்டா, விடுதலை ஆகும் நபரை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைத்தான் பார்ப்பார்கள். இறந்து போனவர் யார் என்பது முன் விடுதலைக்கான தகுதி ஆகாது'' என்கிறார் புகழேந்தி.

மனித உரிமையாளர் 'எவிடென்ஸ்' கதிர், ''நடந்திருப்பது கொடூரமான குற்றம் என்று சொல்லி முன்விடுதலைக்கு மறுக்கிறார்கள். எது கொடூரம் என்பதற்கு என்ன வரையறை? மேலவளவு படுகொலைகள், லீலாவதி கொலை, தா.கிருஷ்ணன் கொலை போன்றவை கொடூரமான குற்றங்களா... இல்லையா? அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் இதுபோல் அடக்கப்பட்டார்களா? அரசாங்கத்தின் கொள்கைகள், நீதிமன்றத்தின் போக்குகள், தீர்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. நளினியை விடுவிக்காமல் இருக்க அரசியல் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஆனால், விடுவிக்கச் சொல்ல மனிதாபிமானக் காரணங்கள் ஏராளம் இருக்கின்றன'' என்கிறார் 'எவிடென்ஸ்' கதிர்.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதியதுதான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. 'நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும், மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது!'

நளினி மகள்!

நளினி - முருகன் தம்பதியருக்கு ஒரே மகள். பெயர் மேகரா. அரித்ரா என்றும் அழைக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தார் நளினி. வேலூர் மகளிர் சிறையில்தான் பிறந்தார் மேகரா. சில ஆண்டுகள் மட்டும் அம்மாவுடன் சிறையில் இருந்த மேகரா, முருகனின் அம்மாவுடன் இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இருந்து சில ஆண்டுகள் கழித்து தமிழகம் வந்து நளினியைச் சந்தித்தார். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், தொடர்ந்து இங்கு தங்குவதற்குத் தடை ஏற்பட்டது. எனவே, முருகனின் சகோதரர் தன்னுடன் ஸ்காட்லாண்டு அழைத்துச் சென்றுவிட்டார். இன்று அங்குதான் ப்ளஸ் டூ படித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து நளினியைப் பார்க்க அவர் முயற்சிக்க, விசா அனுமதி கிடைக்கவில்லை. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டு இருப்பதைக் காரணமாகக் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டதாம். ''என்னுடைய அம்மா நிரபராதி. அவர் என்னை அருகில் இருந்து படிக்கவைக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. அவரது கனவை நிறைவேற்றும் வகையில் படித்து வருகிறேன். அவர் விரைவில் வெளியில் வந்து எனக்கு ஆசி வழங்குவார்'' என்று தனது உறவினர்களிடம் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறாராம் மேகரா!

ஆனந்த விகடன் / 14-04-2010

செவ்வாய், 23 மார்ச், 2010

இன்று உலக தண்ணீர் தினம்

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

‌நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு கடுமையான நோ‌ய்க‌ள்.

மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு. ஆனா‌ல் அதுபோன‌ற்தொரு கா‌ட்‌சியை த‌ற்போது நா‌ம் எ‌ங்காவது பா‌ர்‌க்க இயலுமா?

காண முடியு‌ம், வாச‌லி‌ல் குட‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் அவை ‌நீ‌ர் ‌நிர‌ம்‌பி அ‌ல்ல, ‌நீ‌ர் ‌நிர‌ப்ப, எ‌ப்போதாவது வரு‌ம் குழா‌ய் ‌நீரு‌க்கு‌ம், குடி‌நீ‌ர் லா‌ரி‌க்காகவு‌ம் கா‌த்‌திரு‌க்கு‌ம் குட‌ங்க‌ள் அவை.

முத‌லி‌ல் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் எ‌ன்ன தெ‌ரியுமா? ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டு‌ம், த‌ற்போது எ‌த்தனை குள‌ங்க‌ள் இரு‌ந்த இட‌த்‌தி‌ல் அடு‌க்கு மாடி‌க் குடி‌யிரு‌ப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன, ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் எ‌த்தனை கால‌னிக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ங்கே தே‌ங்‌கி ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நீ‌ர் எ‌ங்கே செ‌ன்று ‌நி‌ற்கு‌ம்? ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌த்ததா ம‌னித சமூக‌ம்? ‌நீ‌ர் இரு‌ந்த இட‌த்தை கா‌லி செ‌ய்து ‌வி‌ட்டு அ‌ங்கே நா‌ம் குடிபோனோ‌ம். த‌ற்போது குடி‌நீ‌ர் இ‌ல்லை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ப்பது‌ம் நா‌ம்தா‌ன்.

70 ‌விழு‌க்காடு பர‌ப்பளவு ‌‌நீ‌ர் இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் 97.5 ‌விழு‌க்காடு க‌ட‌லி‌ல் இரு‌க்கு‌ம் உ‌ப்பு ‌நீ‌ர்தா‌ன். ‌மீது‌ம் 2.5 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்கு‌த்தா‌ன் ‌நில‌த்தடி ‌நீ‌ர் உ‌ள்ளது. இ‌தி‌லு‌ம் துருவ‌ப் பகு‌திக‌ளி‌ல் ப‌னி‌ப்பாறைகளாகவு‌ம், ப‌னி‌த்தரையாகவு‌ம் மா‌றி‌ப் போ‌யிரு‌க்‌கிறது எ‌ஞ்‌சியு‌ள்ள 0.26 ‌விழு‌க்காடு ‌நீரை‌த்தா‌ன் உலக ம‌க்க‌ள் அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நில‌த்தடி ‌நீரை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் மாசுபடாம‌ல் இரு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டியது‌ம் ம‌னித சமுதாய‌த்‌தி‌ன் கடமையா‌கிறது.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்க‌ள், குடி‌நீரு‌க்காக ஒருவரை ஒருவ‌ர் கொ‌ன்று‌ப் போடு‌ம் நிலைதான் ஏற்படும்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம். 



-சூரியன்

ஞாயிறு, 14 மார்ச், 2010

மகளிர் தினமும் மகளிர் மசோதாவும்!

மார்ச் 8 அன்று பெண்கள் தினம். உலகமே பெண்களைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் பெருமைமிகு டில்லி மேல் சபையும் பெண்கள் தினத்தைக் ‘கொண்டாடியது'. மாநில சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவின் நகல்களை மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தார்கள். தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது விவாதம் நடத்த விடாமல் அவையை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். 15 ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டுவரும் இந்த மசோதா மீண்டும் ஒருமுறை தள்ளிப்போடப்படுமோ என்ற சூழ்நிலை எழுந்தது.

என்றாலும் அடுத்த நாள் அதே சபை அந்தச் செயலுக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. தாக்கல் செய்ய விடாமல் தடுத்த எம்.பி.க்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு விவாதம் நடந்தது. மசோதா நிறைவேறியது. எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜும் (பா.ஜ.க.) பிருந்தா காரத்தும் (சி.பி.எம்.) கட்டி அணைத்தபடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்த காட்சியே பெண்களின் உணர்வுகளைப் பளிச்சென்று வெளிப்படுத்தியது. 

ஆனால் மசோதா பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது. இன்னும் மக்களவையில் அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஏப்ரல் 14க்கு முன் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இப்போதைக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 கோடியைத் தொட்டுவிட்ட பெண்களின் முகங்களை லோக்சபா என்று சொல்லப்படும் மக்களவையிலும் மாநில சட்டமன்றத்திலும் பூதக்கண்ணாடி வைத்துத்தான் பார்க்க வேண்டியதாகிறது. இந்த நிலையை மாற்றி அரசியலில் பெண்கள் அதிகாரபூர்வமாக நுழைந்து செங்கோலைக் கையிலெடுக்க வேண்டும் என்பதற்காக லோக்சபா மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாக ஒலித்துவந்தது. 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது வெறும் முயற்சியாகவே முற்றுப்பெற்றுவிட்டது. மூன்று முறை முயற்சிகள் நடந்தன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதி, லோக்சபா சபாநாயகர், ஆளும் கட்சி கூட்டணித் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என நாட்டின் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் தற்போது பெண்களின் கரங்களில்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மசோதாவை நிறைவேற்றலாம் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். ராஜ்ய சபாவில் பிரதான எதிர்க்கட்சிகளான பா.ஜ.க.வும் இடதுசாரிக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தாலும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்ற முக்கியக் கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பதற்காக இந்த மசோதாவை இவர்கள் எதிர்க்கவில்லை. இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது இவர்கள் வாதம். முலாயம் சிங் யாதவ், ‘இந்த மசோதா மிகவும் அபாயகரமானது. தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பார்லிமென்ட்டுக்குத் தேர்வு செய்யப்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கை இது’ என்கிறார். முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதை பா.ஜ.க. விரும்பவில்லை. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதைப் பல கட்சிகள் முழு மனதோடு ஆதரிக்கவில்லை. இதனால் பல சிக்கல்கள் வரும் என்று அவை கழன்றுகொள்கின்றன. உள் ஒதுக்கீடு தருவது என்றால் மசோதாவின் வரைவையே மாற்றி எழுத வேண்டும். விரிவான விவாதமும் கருத்தொற்றுமையும் இல்லாமல் அதைச் செய்ய முடியாது. அப்படியே செய்வதானாலும் அதற்கு மிகவும் தாமதமாகும். எனவே தற்போதுள்ள நிலையிலேயே மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முனைகிறது. ஆனால் உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் ஏற்கனவே பல விதங்களிலும் செல்வாக்குப் பெற்ற மேட்டுக்குடியினர்தான் அதனால் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது முலாயம், லாலு ஆகியோரின் வாதம்.

மகளிர் மசோதாவை எதிர்ப்பதை விட முதலில் அதை அமல்படுத்திவிட்டு, அதன்பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி. உள் ஒதுக்கீடு கேட்டு மசோதாவைக் கிடப்பில் போடுவதற்கு பதிலாக அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் இறங்குவதே நல்லது என்பது முதல்வரின் கருத்து.

ஒரு வழியாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது ஏறத்தாழ 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பிறகு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் மசோதா நிறைவேறியது (தீர்மானத்திற்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக ஒரே ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்).

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் வானில் பெண்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கியுள்ளன. ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள இந்த மசோதா, இனி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறினால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வரும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் 543 எம்.பி.,க்களில், 181 பேர் பெண்களாக இருப்பார்கள். அதேபோல், 28 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் மொத்தமுள்ள 4,109 எம்.எல்.ஏ.,க்களில் 1,370 பேர் பெண்களாக இருப்பார்கள். அப்படி நடந்தால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அது இருக்கும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த மசோதாவுக்கு எதிரான ஆட்சேபங்களை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்திவிட முடியாது. உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் செல்வாக்குப் படைத்த மேட்டுக்குடிப் பெண்களே பிரதிநிதிகளாவார்கள் என்னும் சமூக நீதிக் குரலில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை நிற்க வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம்.

அரசியலுக்கு வர எத்தனை பெண்கள் தயாராக இருப்பார்கள் என்பது இன்னொரு கேள்வி. இந்நிலையில் ஏற்கனவே அரசியலில் இருக்கும் ஆண்களின் நெருங்கிய உறவினர்கள்தான் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்வார்கள், இதனால் குடும்ப ஆதிக்கம் தலை தூக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதுவும் முக்கியமான விஷயம்தான். ஆனால் இந்திய அரசியலில் ஏற்கனவே பல அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குக் கொண்டுவருவதைப் பார்த்த பிறகு இதை ஒரு புதிய பிரச்சினையாக எழுப்பிப் பேசுவது அர்த்தமறது என்பது வெளிப்படை. தவிர, இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் முதல் ஓரிரு தேர்தல்கள்வரைதான் எழும். அதற்குள் எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராகிவிடுவார்கள் என்று நம்பலாம்.

தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து மக்கள் செல்வாக்குப் பெற்று, மக்களுக்காக நல்லது செய்கிற ஒருவரது தொகுதியை பெண்களுக்காக ஒதுக்கினால், அவர் வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட முடியும் என்ர கேள்வியும் எழுப்பப்படுகிறது. பெண்களுக்கான தொகுதிகளைச் சுழற்சி முறையில் தீர்மானிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம்.

பல நூற்றாண்டுகளாகச் சம உரிமை மறுக்கப்பட்டுவந்த பெண்களுக்கு அதிகாரப் பீடத்தில் முக்கிய இடம் அளிக்கும் முயற்சி நடக்கும்போது அதில் சில பிழைகள் ஏற்படத்தான் செய்யும். வரலாற்று நோக்கிலும் சம தர்ம நோக்கிலும் இந்தப் பிரச்னையை அணுகி இந்தச் சட்டத்தை இப்போதைக்கு ஆதரித்து, இதிலுள்ள குறைகளைக் களைவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வதே நல்லது. 



நன்றி - தெனாலி 


-சூரியன்

வெள்ளி, 12 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா!!! - விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா ? இயக்குனர் இந்தப்படம் பார்க்க வரும் ரசிகர்களை நோக்கி கேட்பது போல் இருந்தது எனக்கு .ஏனென்றால் தமிழ் சினிமாவின் காதல் நாயகன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை இந்த படத்தின் நாயகன் சிம்பு செய்கிறார் .ஒரு காதல் நாயகன் செய்யக்கூடிய எந்த சாகசங்களையும் செய்யாமல் நம்மமுடைய நண்பர்கள் கூட்டத்திலிருப்பவனின் காதல் பயணத்தை நாம் அனுபவித்தது போல் இருக்கிறது இந்த படம்.

கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது ,ஒருவேளை ரசிகர்கள் அந்த காதல் உணர்வில் நன்றாக ஊறி திளைக்க வேண்டும் என்று மெதுவாக கொண்டு சென்றாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது .படம் முழுக்க கிளைமாக்ஸ் காட்சி தவிர அனைத்தையும் ரசிகர்கள் ஒருவிதமான புன் சிரிப்புடன் ,நமட்டு சிரிப்புடனும் ,ஒருவிதமான ஆச்சர்ய பார்வையுடனும் ரசித்ததை என்னால் காண முடிந்தது .
 

ஒரு வேளை அதற்க்கெல்லாம் காரணம் நஅம்முடைய காதல் போலவே இருக்கிறதே என்று அர்த்தமோ என்னவோ,அதை அவர்களே வந்து சொன்னால் தான் தெரியும் :) .
ரொம்ப நாளைக்கு அப்புறம் எந்தவிதமான மசாலா அயிட்டங்களும் இல்லாமல் ,யாதொரு சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு முழுமையான இயக்குனரின் படமாக வெளிக்கொண்டு வந்ததற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குனர் கௌதமிற்கும் ,இப்படத்தின் நாயகன் சிலம்பரசனுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும் . சிம்பு நினைத்திருந்தால் இந்த படத்தை எப்படி வேண்டும் என்றாலும் சிதைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம் ,ஆனால் அவர் எடுத்த முயற்சியினால் நமக்கு வெளியில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு அழகான காதல் கதை கொண்ட தரமான திரைப்படம் கிடைத்துள்ளது .

இந்த படத்தைப் பற்றி நான் இவ்வளவு Positive Comments சொன்னதுக்கு நான் ஏதோ காதலில் விழுந்து விட்டதால் தான் உணர்வு பூரவமாக சொல்கிறேன் என்று சிலபேர் நினைப்பார்கள். இப்படியொரு தரமான படத்தை பார்த்து அதை சந்தோஷமாக பலபேருடன் பகிர்ந்து கொள்ள காதலிக்க வேண்டும் என்று அவசியமில்லை .
சிலம்பரசன் ,த்ரிஷா நடிப்பு ,கௌதம் மேனன் இயக்கம் இதெல்லாம் ஒரு ஆச்சர்யத்தை தந்தால்,இதென்ன இதற்க்கு மேல் நான் தருகிறேன் என்று படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் .

ஹோசான பாடலுக்கும் ,இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்குமே கொடுத்த 50 ரூபாய் காலி .இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் எதுவென்று கேட்டால் கடைசி 30 நிமிடங்கள் என்று சொல்லுவேன் .

கடைசியில் சினிமா பேனரில் இயக்கம் - கார்த்திக் என்றிருப்பது மாறி கௌதம் மேனன் என்று மாறும் வரை ..எங்கும் எதிலும் இயக்குனரின் கைவண்ணம் மின்னுகிறது .

இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை ...சுருக்கமாக சொல்வதென்றால் இதைப்படிக்கும் எல்லோரும் கண்டிப்பாக போய் படத்தை பாருங்க ..இதுபோல் இன்னும் நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துங்கள் .

படம் முடிந்து எழுத்து போடும் போது ஒலிக்கும் ஜெஸ்ஸி ..... ஆங்கில பாடல் மிகவும் அருமை - அதை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க !!!!!

-சூரியன்


புதன், 3 மார்ச், 2010

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவோம் ?

அசிங்கம் ..அசிங்கம் ..அம்மா அசிங்கம் என்று குணா படத்தில் நடிகர் கமல் சொல்வது போல ஒரு வசனம் வரும் .ஆனால் இன்று எல்லா தினசரி பத்திரிக்கையை பார்த்ததும் எனக்கு தோன்றுவது ..அசிங்கம் அசிங்கம் இந்த சாமியார்களே அசிங்கம் ..அதுவும் இவனுங்களை நம்பி போற இந்த பரதேசி பக்தர்கள் அதைவிட அசிங்கமானவர்கள் ,மானம் கெட்டவர்கள், மதி கெட்டவர்கள் .

எனக்கு விவரம் தெரிந்து பிரேமானந்தா என்ற ஒரு போலி சாமியார் ,செக்ஸ் குற்றச்சாட்டுக்காக கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.அவர் ஆண்டுக்கு ஒருமுறை பெயிலில் வந்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு செல்கிறார்.ஒரு குற்றவாளியிடம் ஆசி வாங்க அன்றும் வரிசையில் முண்டியடித்து கொண்டு நிற்பான் இந்த மானங்கெட்ட சாமியார் பக்தன் .பிரேமானந்தா கைது முதல் இன்று வரை இந்த சாமியார்கள் லீலைகளும் அதைத் தொடர்ந்து அவர்களின் கைதுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன .ஆனால் இந்த போலி ஆசாமிகளை சாமி என்று நம்பி அலையும் கூட்டம் மற்றும் குறையவே இல்லை .

ஒவ்வொரு முறையும் எவனாவது கைதாகும் போது இந்த ஒரு சாமியார் செய்த தப்புக்காக எல்லாரையும் குறை சொல்வதா என்று எங்களைப்போல் பகுத்தறிவாளிகளை பார்த்து இந்த மானங்கெட்ட பக்தனும் ,சில பொதுவான 'மதில் மேல் பூனைகளும் ' கேட்பதுண்டு . அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ..இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்ல போகிறீர்கள் .எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட இந்த ஊரில் உள்ள முக்கால் வாசி சாமியார்கள் பிடிபட்டு விட்டார்கள் .இன்னும் எஞ்சி இருப்பது 25 சதவிகிதத்தினர் .ஆனால் நீங்கள் இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் சாமியார் பக்தி எனும் போதையில் மூழ்கிருந்தால் இந்த 25 கூடிய விரைவில் 75 ஆக மாறி அவனும் கைதுக்கு தயாராக நிற்பான் .

நமக்கெல்லாம் மானம் ,ரோஷம் என்று உள்ளதா என்றே தெரியவில்லை .அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்த மாதிரியான சாமியார் நாய்களை விட்டு வைப்போமா? (எனக்கு போலி சாமியார் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை ,என்னை பொருத்தவரைக்கும் சாமியார் வேஷம் போடும் அனைவருமே போலியானவர்கள் தான்,இதில் எங்கிருந்து வந்தது போலி சாமியார் என்ற வார்த்தை? )

அன்றே சொன்னார் பெரியார் ,கடவுளை மற! மனிதனை நினை ! என்று ...அனால் நம்ம ஆட்கள் மனிதனை மறந்து விட்டு கடவுளை தான் சதா காலமும் நினைத்துக்கொண்டிருக்கிறான் .இன்று ஏதோ நித்யானந்தன் அகப்பட்டு கொண்டதால் மற்ற சாமியார்களெல்லாம் யோக்கின் என்று நாம் நினைத்துவிடக்கூடாது .இன்று இவன்! நாளை அவர்கள்!.நாம் முழித்துக்கொள்ளாவிட்டால் இது அப்படியே தொடரும்!.....

தமிழ்நாட்டில் நித்யானந்தன் ,ஆந்திராவில் கல்கி பகவான்(?) என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு சாமியார் கிழவன் தன்னுடைய ஆசிரமத்தில் ஆண்,பெண் அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக இருக்க வழிவகை செய்து கொடுத்து நாட்டை கெடுத்துவிட்டான்! என்று கைது செய்யப்பட்டிருக்கிறான் அவனுடைய ஆசிரமம் ஆந்திராவில் மக்களால் சூறையாடப்பட்டது .இங்கே தமிழ்நாட்டில் பரமஹம்ச நித்யானந்த சாமிகள் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலை என்று கேள்விப்பட்டவுடன் அவனுடைய ஆசிரமங்களை சூறையாடுகிறார்கள்,அவனுடைய சிலைகளை உடைக்கிறார்கள் (இவனுக்கு ஒரு ஊரில் சிலை வைத்திருக்கிறார்கள்,எங்கே போய் அடித்துக்கொள்வது  இந்த கொடுமைகளையெல்லாம்).இப்போது சிலை உடைத்தவன் ,ஆசிரமத்தினை சூரையாடினவர்களெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள் ? ,ஏதோ பொதுநலம் கருதி வந்து தகராறு செய்தவர்களா இவர்கள் ? .நிச்சயமாக இல்லை ,அவர்களெல்லாம் இவனை கடவுள் என்று நம்பி ஏமாந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்!! .இப்போது வரும் கோபம் யாருக்கு உதவும் ? ,எதற்கு உதவும்?. சிற்சில சேதாரங்களை ஏற்படுத்த மட்டுமே உதவும்.இது வெறும் தற்காலிக எதிர்ப்புதான் .ஆனால் நாளை வேறு யாரவது ஒருத்தன் இவனை விட திறமையாக ஏமாற்ற வந்தால் ஏமாற நாங்கள் தயார் என்பது போலதான் இருக்கிறது நம் மக்களின் நிலைமை .

யாராவது இனிமேல் இப்படிப்பட்ட சாமியார்களே! தமிழ்நாட்டில் உருவாகக்கூடாது ,அப்படி யாராவது வந்தால் அவர்களை கைது செய்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போராட தயாரா? இப்போது அகப்பட்டவனை கைது செய்ய கோரி போராட்டம் நடத்துகிறீர்கள்!!.சந்தோசம் அவனை கைது செய்த பிறகு என்ன ?...நாம் நம்முடைய வேலைபார்த்துக்கொண்டு கிளம்பிட வேண்டியதுதான்.எல்லாம் அடங்கிய  பிறகு மீண்டும் ஒருவன் முளைப்பான் ,சில அறிவு கெட்ட மக்கள் அவனிடம் போய் அருள் வாக்கு வாங்குகிறேன் என்று வயிற்றில் புள்ளியை  வாங்கி  விட்டு வந்து ..ஐயோ அம்மா என்னை  ஏமாத்திட்டான் ..இவன் பெரிய  போலி சாமி என்று கூப்பாடு போட்டு ஒப்பாரி வைப்பார்கள்.நான் ஏதோ அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதாக நினைக்காதீர்கள்! ..கடந்தகால தமிழக சாமியார்களின் வரலாற்றினை (?) எடுத்து பார்த்தால் உங்களுக்கே தெளிவாக தெரியும்.

எனக்கு இந்த தவறில் உடன்பட்டுள்ள நடிகையைப் பற்றி பேசுவதில் பெரிதும் உடன்பாடில்லை.ஏனென்றால் தினமலர் ஒரு உண்மையை வெளியே சொன்னதற்கே !!!!!! ,கூடிநின்று அந்த பெரிய பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் இன்றைய தமிழ் கதாநாயகர்கள்(?) .அதுவும் அன்றி பொதுவாகவே மக்களிடம் நடிகைகளைப் பற்றி ஒன்றும் பெரிதாக நல்ல மதிப்பீடு கிடையாது .எனவே நான் இதை உங்கள் விமர்சனத்துக்கே விட்டுவிடுகிறேன் .

அரசாங்கம் இந்த மாதிரியான குற்றங்களை தடுக்க இதுவரை எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை .காஞ்சி "காம"கோடிகள் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் நடிகை சொர்ணமால்யாவுடன் கூத்தடித்த போதே இந்த அரசாங்கம் இந்த மாதிரியான அசிங்கங்களை தடுக்க ஏதாவது செய்யும் என்று நினைத்தேன் .ஆனால் நமக்கு ஏமாற்றமே மிச்சம் .

இதோ இப்போது தன்னை பெரியாரின் வாரிசு ,அவரின் வழி நடக்கும் தொண்டன் ,தற்போது நடப்பது பெரியார் கண்ட ஆட்சி என்றெல்லாம் சொல்லும் மஞ்சள் துண்டு செம்மல் (இன்றும் அந்த மஞ்சள் ரகசியம் புரியாத புதிராகவே உள்ளது ) திரு.கருணாநிதி அவர்கள் ஏதாவது சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் சொன்ன பதில் ,

"’கோயில்கள் எல்லாம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறதே? ஆசிரமங்களில் எல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதே? ஏதேனும் நடவடிக்கை எடுக்கக்கூடாதா?’’என்று கேட்டதற்கு,

‘’இந்து அறநிலையத்துறையின் உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கும்’’என்று தெரிவித்தார்."


இது வெறும் பத்திரிகை பேட்டியாக இல்லாமல் இந்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மக்களும் இனிமேலும் ஆன்மிகம்,சாமியார்கள் என்று மூடநம்பிக்கையில் திளைக்காமல் மனித இனத்திற்கே உரிய பகுத்தறிவைக்கொண்டு சிந்திக்குமாறு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன்

இனிமேல் இப்படி ஒரு சம்பவமும்,அதைத் தொடர்ந்த இந்த மாதிரி கருத்து பகிர்வும் ஏற்படக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.


ஆசை நிறைவேறுமா? இல்லை பேராசையாகிவிடுமா? பார்க்கலாம் ?


இதையும் பாருங்க .....

http://www.maalaimalar.com/2010/03/03152851/sex.html

http://www.maalaimalar.com/2010/03/03150919/sex.html

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6659&id1=12



-சூரியன்

செவ்வாய், 2 மார்ச், 2010

நுழைவுத்தேர்வு எதற்கு?


இந்தத் துறைதான் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி அங்கிங்கெனாதபடி எங்கும் நுழைந்துவிடுகிறது அரசியல். தற்போது கல்வித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கி வருகிறது மத்திய அரசு. ஆனால் இதில் பலிகடாவாக்கப்படுவதென்னவோ அப்பாவி மாணவர்கள்தான். தமிழகத்தில் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் வகையில் புதிய கல்வி சட்ட மசோதாவை முன்வைத்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கும் இந்த கல்வி சட்ட மசோதாவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா குறித்து விவாதிக்கும் முன் தமிழக அரசு பொதுநுழைவுத்தேர்வை ரத்து செய்ததன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும்.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி முடித்த கையோடு, தொழிற்கல்விகளில் சேருவதற்கான பொதுநுழைவுத்தேர்வுக்காக முட்டிமோதி படிப்பதிலேயே மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அதுவும் ஏட்டுச்சுரைக்காய்க்குக் கூட வழியில்லாத பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. கல்விக் கட்டணம் செலுத்த வசதியில்லாமல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆயிரக் கணக்கில் செலவழித்து பொதுநுழைவுத்தேர்வுக்கென தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதும் குதிரைக் கொம்புதான். இந்த சமூக ஏற்றத் தாழ்வுகளால் நகரங்களில் உள்ள ஓரளவுக்கு வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே நுழைவுத்தேர்வின் மூலமாக தொழிற்கல்விகளில் சேர்ந்தனர். கிராமப்புற மாணவர்களிடம் திறமை இருந்தும் தொழிற்கல்வி அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் கடந்த 2007ம் ஆண்டு பொதுநுழைவுத்தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டுவந்து, கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்தது தமிழக அரசு. தமிழக அரசின் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.

அரசின் இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி அப்போதே சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அரசு தனது நிலையில் உறுதியாக இருந்ததோடு, நுழைவுத்தேர்வை ரத்து செய்ததற்கான ஆதாரங்களையும் முன்வைத்தது. 'கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேவை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த விஷயத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்திய பிறகுதான் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நகர்ப்புற மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது' என்ற அரசு தரப்பின் நியாயமான காரணங்களால் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். கூடவே, அதை எதிர்த்து போடப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவையும் எடுபடவில்லை. உண்மையிலேயே மக்களுக்கு பயன்படுகிற விஷயத்தில் அரசு கொள்கை உறுதியுடன் இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் நுழைவுத்தேர்வு விஷயத்திலும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு மாணவர்கள் அவர்களது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். 2007ம் ஆண்டுக்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளில் சேரும் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளி விவரக் கணக்கு. 2006ம் ஆண்டுவரை தமிழ்வழியில் படித்த மாணவர்களில் சராசரியாக 26% மாணவர்கள்தான் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மாணவர்களின் இந்த முன்னேற்றத்துக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும்விதமாக மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து பேசி வருகிறது மத்திய அரசு. இதை வைத்துப் பார்க்கும்போது மத்திய அரசு கல்வித்துறை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத்தான் தெரிகிறது. இதன் ஒருகட்டமாக தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை கல்வித்துறையில் செயல்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான கல்வி முறை இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்றால், கேட்கப்படும் கேள்விகளின் தரம், மொழி எல்லாம் எப்படி இருக்கும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் இப்போதே பயமும் பதட்டமும் நிலவ ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் மத்திய அரசின் புதிய கல்வி சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

ஆனால் இந்த எதிர்ப்பை மத்திய அரசு எந்தவகையில் எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறி. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்ற மத்திய அமைச்சர் கபில்சிபலின் கருத்து ஏற்கப்பட்டால், நம் தமிழகத்து மாணவர்களின் நிலை?! கிராமப் பள்ளிகளிலும் மத்திய அரசுப்பள்ளிகளிக்கு இணையாக தரமான கல்வியைக் கொடுத்துவிட்டு பொது நுழைவுத்தேர்வு வைத்தால் யார் எதிர்க்கப் போகிறார்கள்? அதை விட்டுவிட்டு எளியோரையும் வலியோரையும் ஒரே தராசில் நிற்க வைப்பதில் நியாயம் இல்லை. மத்திய மாநில அரசுகளின் உரிமை போராட்டத்தில் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்வார்களா?

சனி, 27 பிப்ரவரி, 2010

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.

ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)