ஓகேனக்கல் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓகேனக்கல் பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 12 நவம்பர், 2009
ஒகேனக்கல் ரகளையான பயணம் - பாகம் 3
அப்பாடா !!!! ஒரு வழியாக ஒகேனக்கல் சென்று விட்டோம் .நாங்கள் ஏற்கனவே சென்று இருந்தபொழுது எங்களுக்கு பரிசல் ஒட்டி வந்தவரின் Visiting card - ஐ ( அதிர்ச்சி வேண்டாம் !! இங்கு பரிசல் ஒட்டுபவரிலிருந்து பொட்டி கடை வைத்திருப்பவர் வரை visitng card உடன் தான் சுற்றுகிறார்கள் )நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் . ஒகேனக்கலுக்கு வண்டி சென்ற உடனே parking charge வசூலிப்பார்கள் . அங்கிருந்தே உங்களை மொய்க்க தொடங்கிவிடுவார்கள் ., வேறு யாருமில்லை அவர்கள் பரிசல் ஓட்டுபவர்கள் , மசாஜ் செய்பவர்கள் என நீளும் பட்டியல் ,இதில் மீன் வாங்கி கொடுத்தால் சமையல் செய்துதர கூட ஆளிருக்கு ( நீங்கள் வேறு எதற்காவது ஆள் எதிர்பார்த்தால் போக வேண்டிய blog வேற !!!!! :) :) :) )
நாங்கள் பார்க்க வேண்டிய நபரின் பெயர் பெருமாள் ,அவருக்கு call செய்து விட்டு சந்திக்க விழைகிறோம் .இருந்தாலும் மக்கள் எங்களை விட்டபாடில்லை .....எப்படியோ அவர்களை எல்லாம் சமாளித்து கொண்டு பெருமாளை பார்த்து விட்டோம் .அந்த திருப்பதி பெருமாள கூட easy ஆக பார்த்துடலாம் போலிருக்கு இந்த பெருமாள பார்க்க நாங்க ரொம்பவே சுத்தி விட்டோம் . எப்படியோ பெருமாளை பார்த்து என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்லி விட்டு ....... மீன் வாங்க புறப்பட்டோம் .
மீன்தானே வாங்க போறோம்னு தெரியாம எல்லா பைகளையும் தூக்கி கொண்டு கிளம்பினார்கள் ..என்னமோ சபரி மலைக்கு வந்த மாதிரி ஆளாளுக்கு ஒரு பை வைத்திருந்தோம் . இருந்தாலும் எங்கள் கூட்டத்திலேயே ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருக்கிற Mr.Omlet மட்டும் எந்த பை யும் தூக்காம எமாத்திகிட்டே வந்தான் . கடைசில சண்ட போட்டு ஒரு பெரிய பை தூக்க வச்சிட்டோம் . இப்படியே சண்ட போட்டுக்கிட்டு மீன் விற்கிற இடத்தை நோக்கி நடக்கும் போதே எங்கள் அணியின் Chinna Hulk க்குக்கு ஒரு ஆசை இப்போதே சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விட வேண்டுமென்று , நாங்களெல்லாம் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் வழக்கம் போல அடம் பிடித்து " கைபேசி ஓவி " யையும் கூட கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான் . ஆனா அவன் குளிக்க போறத விட ரொம்ப ஆர்வமா இருந்தது எங்களுக்கு முன்னாடி நடந்து சென்ற ஒரு பெண்ணை பார்க்கத்தான் :) :) :) . இது தெரிந்ததும் இன்னும் சிலர் அவனுடன் கிளம்பி விட்டனர் . நாங்கள் அந்த பைகளை காவல் காத்து கொண்டு மீன் வெட்டும் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம் ?? .
மீன் வெட்டி சமைக்கத்தயார் . அப்புறம் நாட்டுக்கோழி பிடிக்க போக வேண்டும் , ஆனால் குளிக்க செல்கிறோம் என்று போனவர்கள் ஆளையே காணவில்லை . போன் பண்ணாலும் யாரும் எடுக்கவில்லை . அடிக்கிற வெயிலுக்கு எங்களால் அங்கு நிற்கவே முடியவில்லை ( நாமெல்லாம் பெங்களூர் வாசியாச்சே, அதான் சைடுல இப்படி ஒரு பிட்டு :) :) :) )
ஒரு வழியாக காக்காய் குளியல் முடித்துவிட்டு , ஒரு படையாக வந்தார்கள் .... அப்புறம் அவர்களிடம் சில பல பைகளை கொடுத்துவிட்டு நடையை கட்டினோம் . நானும் சைதையும் கார் இருக்கும் இடம் வந்து சேர்ந்து திரும்பிபார்த்தால் HULK ..Chinna Hulk ,Ovi, Five ,Omlet யாரையுமே காணோம் .ஒரே காண்டா போச்சு ..சரி இதுக்கு மேல இவங்கல எங்கே தேடுவதுன்னு ...கார் பக்கத்திலேயே இருந்து விட்டோம் ....வந்தார்கள் 30 நிமிடம் கழித்து ஆடி அசைந்து வழியில் chinna hulk க்குக்கு ஒரு பெரிய சைஸ் ட்ரவுசர் வாங்கிகிட்டு ... !!!!!! .
இந்த நேரத்தில் சைதை நான் மசாஜ் செய்ய போறேன்னு ஒரு பிட்ட போட்டதும் நீ ..நானென்று ஒரே போட்டி ... கடைக்கு சென்றிருந்த எங்கள் அணியின் பெருசு களிடம் சென்று ஒரு நவரத்தினா ஆயில் வேண்டும் என்று சொன்னதும் அதெல்லாம் ஏற்கனவே வாங்கிட்டோம் என்று சொன்னார்கள் . பெருசு பெருசு தான்னு நாங்கள் அப்படியே ஒரே பெருமிதத்தில் !! திரும்பி நடந்தோம் .
ஓர் வழியாக கோழி, ( நாட்டு கோழி என்றது chinna hulk க்குக்கு ஒரே கொண்டாட்டம் ...உற்சாகத்தில் என்ன என்னமோ பேசினான் !!!. ) சமையல் சாமானெல்லாம் வாங்கிட்டு காருக்கு வந்தார்கள் . பரிசல் ஓட்டுனர் பெருமாள் அண்ணன் ஆட்டோ வோடு ரெடி யாக வந்து விட்டார் . என்னடா இவன் குழப்புறான்னு நினைக்க வேண்டாம் . நாங்கள் ஒகேனக்கல் Bus Stand லேர்ந்து ஒரு 10 Km காட்டுக்குள் சென்று அங்கிருந்து மீண்டும் Bus stand க்கு பரிசலில் வரணும் என்பதுதான் plan . இந்த ஐடியா நல்ல இருக்குதா ???
அப்படியே ..அற்றில் வரும் வழியில் ஒரு தீவில் இறங்கி குளிச்சிட்டு ,சமைச்சு சாப்பிட்டு விட்டு வருவதாக Plan பண்ணி கிளம்பினோம் !!! ..... :) :)
ஆனால் , எதையும் " பிளான் பண்ணி செய்யணும் ,பிளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான்னு " வடிவேலு சொல்ற மாறியே !!!!! ..எங்க எல்லாரையும் ஒரு விஷயம் சொல்ல வெச்சது ...
அப்படி என்ன விஷயம் அது ?????
- தொடரும் ..
திங்கள், 9 நவம்பர், 2009
ஒகேனக்கல் - ஒரு ரகளையான பயணம்... பாகம் 2
எல்லோரும் முதல் பாகத்தை படித்து ரசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பாகத்தில் அடி எடுத்து வைக்கின்றேன் .
ஓசூரிலிருந்து புறப்பட்ட எங்கள் கார் மின்னல் வேகத்தில் ஒகேனக்கல் இருக்கும் திசையை நோக்கி பறந்தது . இடையில் எங்கும் தேவையில்லாமல் நிறுத்தக்கூடாது என்று தான் சென்று கொண்டிருந்தோம் .ஆனால் அந்த ஒரு சம்பவம் எங்களுக்கு முன்னால்சென்ற காரை நிறுத்த வைத்துவிட்டது . அது என்ன என்று சொல்வதற்கு முன் நாங்கள் கண்ட ஒரு விபத்தை பற்றி சொல்ல நினைக்கிறேன் , ஓசூரிலிருந்து சுமார் 20 km தொலைவில் நாங்கள் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு சரக்கு லாரிகள் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போல மோதி விபத்துக்குள்ளாயிருந்தன.இந்திய நாட்டிற்கே உரிய பாரம்பரிய பண்பின் அடிப்படையில் அந்த இடத்தில் காவல் துறையோ ,பொது மக்கள் கூட்டமோ இல்லாதிருந்தது எங்களுக்கு இந்நாட்டு மக்களை நினைத்து ( என்னையும் சேர்த்துத்தான் ) ஆச்சர்ய பட வைக்கும் வேலை இல்லாமல் செய்துவிட்டது .
அதை கடந்து சிறிது தூரம் சென்றதும் எங்கள் முன்னால் சென்ற கார் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தது .ஏற்கனவே சொன்னபடி தேவையில்லாமல் எங்கும் காரை நிறுத்தக்கூடாது என்று சொல்லியிருந்ததால் என்ன ஆச்சு என்ற தோரணையிலேயே நாங்கள் எங்களுடைய காரையும் நிறுத்தினோம் .காரிலிருந்து கீழிறங்கிய உடனே நண்பர்கள் சிலர் வழக்கம் போல தம் அடிக்க ஆரம்பித்து விட்டனர் . நாங்கள் கூட இதற்காகத்தான் நிறுத்தினார்களோ என்று நினைத்துகொண்டிருக்கும் வேலையில் எங்களுடன் வந்திருந்த நண்பன் ஒருவன் அங்கிருந்த Cement bench இல் மிகவும் சோர்வாக உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு இவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டோம் . இதற்க்காகத்தான் காத்திருந்தது போல அனைவரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் .என்ன நடந்தது என்று விசாரிக்கையில் கடந்த பாகத்தின் கடைசி வரிக்கான விடை கிடைத்தது ...
அதாவது லாரி விபத்தினை கடந்து சென்ற பிறகு எங்கள் மின்னல் வேக கார் ஓட்டுனர் எடுத்த அதி பயங்கரமான over take க்கை கண்டு அந்த காரிலிருந்த என் நண்பனின் உயிர் நாடி!!!!!!! ஊசலாடியது போலிருக்கிறது :) :) :) :) . அவனை relax செய்வதற்காகவே வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் நான் சொல்ல போகிறேன் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட , இந்த ரகளையான பயணத்தில் கலந்து கொண்ட என் நண்பர்கள் இந்த விஷயத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும்படி கேட்டனர் :) :) :) ( அடுத்தவன் சங்கடத்தில் நம்ம ஆட்களுக்கு எப்பவுமே ஒரு இனம்புரியாத சந்தோசம் ) .
இதற்கிடையில் நம்ம ஆட்களுக்கு இசை ஆர்வம் பொங்கி வழிந்து ரோட்டிலேயே இசை கச்சேரி நடத்தும் அளவுக்கு Sound வைத்து பாட்டு கேட்க ஆரம்பித்துவிட்டனர் . என்னை போல் சிலர் போதும் இந்த கூத்து என்று கெஞ்சி கேட்டும் செவி சாய்க்காமல் தொடர்ந்து ..... ஒரு வழியாக அவர்களாகவே முடிவுக்கு வந்து மீண்டும் வண்டியை கிளப்பினர். ( இந்த திடீர் இசை ஆர்வத்துக்கு காரணம் காரிலிருந்து கிடைத்த ஒரு Disco song audio CD தான் ).
எப்படியோ மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம் .. .. ராயக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் எங்கள் முன் சென்ற மின்னல் வேக காரை over take செய்து விட்டோம் . இந்த அறிய செயலை செய்தது எங்கள் நண்பன் HULK ( அவரை நாங்கள் செல்லமாக இப்படித்தான் அழைப்போம் :):):) )
ராயக்கோட்டை தாண்டி பாப்பாரப்பட்டி ,பாலக்கோடு என்று எங்கள் பயணம் கொஞ்சம் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது . திடீரென்று பாலக்கோடு தாண்டி ஒரு ஹோட்டல் -ஐ பார்த்தவுடன் எங்களுக்குள் ஒரு சலசலப்பு ..அதற்க்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை ..நாங்கள் ஏற்கனவே ஒகேனக்கலுக்கு சென்றோம் என்று சொன்னேன் அல்லவா ..அப்போது இங்கேதான் Dinner சாப்பிட்டோம் , இந்த கடை கொத்து பரோட்டா அவ்வளவு அருமை .....
இப்படி அரட்டை அடித்துக்கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது ...திடீரென்று தான் எங்களுக்கு தோன்றியது கையில் Digital camera மற்றும் Handy cam கொண்டு வந்திருக்கிறோம் என்று ...அப்புறம் என்ன ...நாங்களும் PC Sreeram உடைய சீடர்கள் தான் என்று நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .....
எப்படியெல்லாம் நிரூபித்தோம் ..... யார்யாரோட மானம் கப்பல் ஏறியது என்பதை அடுத்து பாப்போம் .... :) :)
- தொடரும் ....
ஓசூரிலிருந்து புறப்பட்ட எங்கள் கார் மின்னல் வேகத்தில் ஒகேனக்கல் இருக்கும் திசையை நோக்கி பறந்தது . இடையில் எங்கும் தேவையில்லாமல் நிறுத்தக்கூடாது என்று தான் சென்று கொண்டிருந்தோம் .ஆனால் அந்த ஒரு சம்பவம் எங்களுக்கு முன்னால்சென்ற காரை நிறுத்த வைத்துவிட்டது . அது என்ன என்று சொல்வதற்கு முன் நாங்கள் கண்ட ஒரு விபத்தை பற்றி சொல்ல நினைக்கிறேன் , ஓசூரிலிருந்து சுமார் 20 km தொலைவில் நாங்கள் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு சரக்கு லாரிகள் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போல மோதி விபத்துக்குள்ளாயிருந்தன.இந்திய நாட்டிற்கே உரிய பாரம்பரிய பண்பின் அடிப்படையில் அந்த இடத்தில் காவல் துறையோ ,பொது மக்கள் கூட்டமோ இல்லாதிருந்தது எங்களுக்கு இந்நாட்டு மக்களை நினைத்து ( என்னையும் சேர்த்துத்தான் ) ஆச்சர்ய பட வைக்கும் வேலை இல்லாமல் செய்துவிட்டது .
அதை கடந்து சிறிது தூரம் சென்றதும் எங்கள் முன்னால் சென்ற கார் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தது .ஏற்கனவே சொன்னபடி தேவையில்லாமல் எங்கும் காரை நிறுத்தக்கூடாது என்று சொல்லியிருந்ததால் என்ன ஆச்சு என்ற தோரணையிலேயே நாங்கள் எங்களுடைய காரையும் நிறுத்தினோம் .காரிலிருந்து கீழிறங்கிய உடனே நண்பர்கள் சிலர் வழக்கம் போல தம் அடிக்க ஆரம்பித்து விட்டனர் . நாங்கள் கூட இதற்காகத்தான் நிறுத்தினார்களோ என்று நினைத்துகொண்டிருக்கும் வேலையில் எங்களுடன் வந்திருந்த நண்பன் ஒருவன் அங்கிருந்த Cement bench இல் மிகவும் சோர்வாக உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு இவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டோம் . இதற்க்காகத்தான் காத்திருந்தது போல அனைவரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் .என்ன நடந்தது என்று விசாரிக்கையில் கடந்த பாகத்தின் கடைசி வரிக்கான விடை கிடைத்தது ...
அதாவது லாரி விபத்தினை கடந்து சென்ற பிறகு எங்கள் மின்னல் வேக கார் ஓட்டுனர் எடுத்த அதி பயங்கரமான over take க்கை கண்டு அந்த காரிலிருந்த என் நண்பனின் உயிர் நாடி!!!!!!! ஊசலாடியது போலிருக்கிறது :) :) :) :) . அவனை relax செய்வதற்காகவே வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் நான் சொல்ல போகிறேன் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட , இந்த ரகளையான பயணத்தில் கலந்து கொண்ட என் நண்பர்கள் இந்த விஷயத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும்படி கேட்டனர் :) :) :) ( அடுத்தவன் சங்கடத்தில் நம்ம ஆட்களுக்கு எப்பவுமே ஒரு இனம்புரியாத சந்தோசம் ) .
இதற்கிடையில் நம்ம ஆட்களுக்கு இசை ஆர்வம் பொங்கி வழிந்து ரோட்டிலேயே இசை கச்சேரி நடத்தும் அளவுக்கு Sound வைத்து பாட்டு கேட்க ஆரம்பித்துவிட்டனர் . என்னை போல் சிலர் போதும் இந்த கூத்து என்று கெஞ்சி கேட்டும் செவி சாய்க்காமல் தொடர்ந்து ..... ஒரு வழியாக அவர்களாகவே முடிவுக்கு வந்து மீண்டும் வண்டியை கிளப்பினர். ( இந்த திடீர் இசை ஆர்வத்துக்கு காரணம் காரிலிருந்து கிடைத்த ஒரு Disco song audio CD தான் ).
எப்படியோ மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம் .. .. ராயக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் எங்கள் முன் சென்ற மின்னல் வேக காரை over take செய்து விட்டோம் . இந்த அறிய செயலை செய்தது எங்கள் நண்பன் HULK ( அவரை நாங்கள் செல்லமாக இப்படித்தான் அழைப்போம் :):):) )
ராயக்கோட்டை தாண்டி பாப்பாரப்பட்டி ,பாலக்கோடு என்று எங்கள் பயணம் கொஞ்சம் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது . திடீரென்று பாலக்கோடு தாண்டி ஒரு ஹோட்டல் -ஐ பார்த்தவுடன் எங்களுக்குள் ஒரு சலசலப்பு ..அதற்க்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை ..நாங்கள் ஏற்கனவே ஒகேனக்கலுக்கு சென்றோம் என்று சொன்னேன் அல்லவா ..அப்போது இங்கேதான் Dinner சாப்பிட்டோம் , இந்த கடை கொத்து பரோட்டா அவ்வளவு அருமை .....
இப்படி அரட்டை அடித்துக்கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது ...திடீரென்று தான் எங்களுக்கு தோன்றியது கையில் Digital camera மற்றும் Handy cam கொண்டு வந்திருக்கிறோம் என்று ...அப்புறம் என்ன ...நாங்களும் PC Sreeram உடைய சீடர்கள் தான் என்று நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .....
எப்படியெல்லாம் நிரூபித்தோம் ..... யார்யாரோட மானம் கப்பல் ஏறியது என்பதை அடுத்து பாப்போம் .... :) :)
- தொடரும் ....
வியாழன், 5 நவம்பர், 2009
ஒகேனக்கல் - ஒரு ரகளையான பயணம் ..பாகம் -1
ஒகேனக்கல் சென்று வருவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல ..சில நாட்களுக்கு முன்பு Mystery minds -ல் இருக்கும் ஒரு காளை மாட்டு திருமணத்திற்கு செல்லும் வழியில் கிடைத்த சிறிது நேரத்தில் ஒகேனக்கல் சென்று இயற்கையை ரசித்துவிட்டு வந்தவர்கள் நாங்கள்." ( Mystery minds என்பது எங்கள் நண்பர்கள் குழுவின் பெயர் )"
அப்போதே நாங்கள் அனைவரும் திட்டம் தீட்டினோம் ..மீண்டும் ஒருமுறை இங்கு வந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பது என்று.அதற்கான நேரமும் வந்தது Master plan ஒன்று போட்டோம் ..நம்ம பசங்க plan போட்டா எந்த மாதிரி இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா ? ஆரம்பமே சொதப்பல் ..சிலர் அலுவல் காரணமாக வர இயலவில்லை .எப்படியோ கடைசியில் ஒன்பது பேர் ,இரண்டு மகிழுந்துகளில் ( கார்களில் ) செல்வது என்று தீர்மானம் போட்டு தயாரானோம் .
எங்களோட திட்டப்படி காலை 6 மணிக்கு புறப்படவேண்டும் .ஆனால் நாங்கள் எழுந்து ஆடி அசைந்து கிளம்ப நேரம் காலை 7.30 ஆகிவிட்டது .அப்பாடா... மணி 8-ஐ தொட்டதும் எங்கள் கார்கள் தெருவிலிருந்த புழுதியை வாரியிரைத்துக்கொண்டு கிளம்பியது. ( ஒருவேளை தெருவே எங்களை வேடிக்கை பார்த்திருக்களாம்.ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை ).ஒரு வழியாக Electronic சிட்டி - ஐ தாண்டி வண்டி போய்க்கொண்டிருக்கையில் பசங்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது .நம்ம பசங்க எதை வேண்டுமென்றாலும் பொறுத்து கொள்வார்கள் .பசி என்று வந்துவிட்டால் எல்லோரும் HULK -ஆக மாறி விடுவார்கள் .
எங்களோட திட்டப்படி காலை 6 மணிக்கு புறப்படவேண்டும் .ஆனால் நாங்கள் எழுந்து ஆடி அசைந்து கிளம்ப நேரம் காலை 7.30 ஆகிவிட்டது .அப்பாடா... மணி 8-ஐ தொட்டதும் எங்கள் கார்கள் தெருவிலிருந்த புழுதியை வாரியிரைத்துக்கொண்டு கிளம்பியது. ( ஒருவேளை தெருவே எங்களை வேடிக்கை பார்த்திருக்களாம்.ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை ).ஒரு வழியாக Electronic சிட்டி - ஐ தாண்டி வண்டி போய்க்கொண்டிருக்கையில் பசங்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது .நம்ம பசங்க எதை வேண்டுமென்றாலும் பொறுத்து கொள்வார்கள் .பசி என்று வந்துவிட்டால் எல்லோரும் HULK -ஆக மாறி விடுவார்கள் .
அதனால் ஒரு நல்ல Hotel - ஆக பார்த்து நிறுத்தி ஆட்டைய போட்டுட்டு கிளம்ப தயாரானோம் .மணி சரியாக 9 -ஐ தொட்டிருந்தது .எல்லோரும் அவரவர் கார்களில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் புழுதியை கிளப்பினோம் . சரியா 1 கி .மீ கூட சென்றிருக்க மாட்டோம் மீண்டும் ஒரு நிறுத்தம் .இப்போது கார்களுக்கு பசி அதனால் அதற்கும் கொஞ்சம் எரிபொருள் போட்டுவிட்டு சபதம் ஏற்றோம் .
சபதம் என்றவுடன் பெரிதாக ஏதும் நினைத்து விடாதீர்கள் அடுத்த stopping ஓசூர் தாண்டித்தான் என்று சபதம் கொண்டோம் :) .
நம்ம பசங்க சபதம் போட்டா என்றைக்காவது நிறைவேற்றி இருக்கிறார்களா .....ஆமாம் இப்பொழு நீங்கள் நினைப்பதேதான் நடந்தது ..மீண்டும் ஒரு நிறுத்தம் ஆனால் இது கார் ஓட்டுனரை மாற்றுவதற்காக ( இந்த ஓட்டுனரை பற்றி சுருக்கமா சொல்லனும்னா இவர் குறுக்கு சந்துல கூட 100 Km வேகத்துல போகக்கூடியவர் .) ஓட்டுனர் மாறியதுதான் தாமதம் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் எங்கள் பார்வைலிருந்து மறைந்தது . நாங்கள் அடைப்புக்குறிக்குள் சொன்ன விளக்கத்தை எங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறி மாறி சொல்லிக்கொண்டு பின்னாலேயே பயணமானோம் .
அப்பாடா ஒரு வழியாக கர்நாடகா எல்லை தாண்டிவிட்டோம் . அடுத்து ஓசூர் தான் .எங்களுக்கு முன்னால் சீறி கொண்டு சென்ற கார் எங்களை வரவேற்க ஓசூர் எல்லையிலேயே நின்று கொண்டிருந்தது . இந்த முறை நாங்கள் யாரும் கீழிறங்க வில்லை . காருக்கு உள்ளிருந்தே ஒரு "ஹாய்" சொல்லிவிட்டு கிளம்பினோம் .
ஓசுரின் எல்லையை தாண்டியதும் ஒரு பெரிய குழப்பம் .இதை ஒரு பெரிய நாட்டாமையால் தான் தீர்க்கமுடியும் என்றாலும் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து கேட்டோம் . அந்த குழப்பம் வேறு ஒன்றும் இல்லை ஒகேனக்கலுக்கு எப்படி போறதுன்னுதான் :) :) :) .நாங்கள் ஏற்கனவே சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டதால் விசாரித்தோம் . ( நீங்கள் கடுப்பாவது தெரிகிறது ,அதனால் இன்றைக்கு இது போதும் . வேகமாக சென்ற காரில் இருந்த என் நண்பனுக்கு நேர்ந்த ஒரு அசௌகரியமான நிலையை பற்றி அடுத்து பார்ப்போம்.
ஓசுரின் எல்லையை தாண்டியதும் ஒரு பெரிய குழப்பம் .இதை ஒரு பெரிய நாட்டாமையால் தான் தீர்க்கமுடியும் என்றாலும் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து கேட்டோம் . அந்த குழப்பம் வேறு ஒன்றும் இல்லை ஒகேனக்கலுக்கு எப்படி போறதுன்னுதான் :) :) :) .நாங்கள் ஏற்கனவே சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டதால் விசாரித்தோம் . ( நீங்கள் கடுப்பாவது தெரிகிறது ,அதனால் இன்றைக்கு இது போதும் . வேகமாக சென்ற காரில் இருந்த என் நண்பனுக்கு நேர்ந்த ஒரு அசௌகரியமான நிலையை பற்றி அடுத்து பார்ப்போம்.
( என்னடா இவன் இவ்வளவு மொக்க போடுறானே என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . ஏனென்றால் இது மிகவும் சுருக்கமாக ஆரம்பித்து சுருக்கமாக சொல்ல நான் முயற்சி செய்துகொண்டிருக்கும்
பயணக்குறிப்பு . எங்க ஆளுங்கள பத்தி சொல்ல ஆரம்பித்திருந்தால் இன்னும் நாம் Electronic city - வையே தாண்டி இருந்திருக்க மாட்டோம் . அதனால என் மேல் கடுப்பு கொள்ளாமல் இந்த இனிய பயண குறிப்பை படித்து மகிழவும் .இனிமேல் தான் Mystery minds -இன் உண்மையான அட்டகாசத்த பற்றி படிக்க போறீங்க :) :) )
- தொடரும் .....
இந்த தொடரைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)