புதன், 3 மார்ச், 2010

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவோம் ?

அசிங்கம் ..அசிங்கம் ..அம்மா அசிங்கம் என்று குணா படத்தில் நடிகர் கமல் சொல்வது போல ஒரு வசனம் வரும் .ஆனால் இன்று எல்லா தினசரி பத்திரிக்கையை பார்த்ததும் எனக்கு தோன்றுவது ..அசிங்கம் அசிங்கம் இந்த சாமியார்களே அசிங்கம் ..அதுவும் இவனுங்களை நம்பி போற இந்த பரதேசி பக்தர்கள் அதைவிட அசிங்கமானவர்கள் ,மானம் கெட்டவர்கள், மதி கெட்டவர்கள் .

எனக்கு விவரம் தெரிந்து பிரேமானந்தா என்ற ஒரு போலி சாமியார் ,செக்ஸ் குற்றச்சாட்டுக்காக கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.அவர் ஆண்டுக்கு ஒருமுறை பெயிலில் வந்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு செல்கிறார்.ஒரு குற்றவாளியிடம் ஆசி வாங்க அன்றும் வரிசையில் முண்டியடித்து கொண்டு நிற்பான் இந்த மானங்கெட்ட சாமியார் பக்தன் .பிரேமானந்தா கைது முதல் இன்று வரை இந்த சாமியார்கள் லீலைகளும் அதைத் தொடர்ந்து அவர்களின் கைதுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன .ஆனால் இந்த போலி ஆசாமிகளை சாமி என்று நம்பி அலையும் கூட்டம் மற்றும் குறையவே இல்லை .

ஒவ்வொரு முறையும் எவனாவது கைதாகும் போது இந்த ஒரு சாமியார் செய்த தப்புக்காக எல்லாரையும் குறை சொல்வதா என்று எங்களைப்போல் பகுத்தறிவாளிகளை பார்த்து இந்த மானங்கெட்ட பக்தனும் ,சில பொதுவான 'மதில் மேல் பூனைகளும் ' கேட்பதுண்டு . அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ..இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்ல போகிறீர்கள் .எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட இந்த ஊரில் உள்ள முக்கால் வாசி சாமியார்கள் பிடிபட்டு விட்டார்கள் .இன்னும் எஞ்சி இருப்பது 25 சதவிகிதத்தினர் .ஆனால் நீங்கள் இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் சாமியார் பக்தி எனும் போதையில் மூழ்கிருந்தால் இந்த 25 கூடிய விரைவில் 75 ஆக மாறி அவனும் கைதுக்கு தயாராக நிற்பான் .

நமக்கெல்லாம் மானம் ,ரோஷம் என்று உள்ளதா என்றே தெரியவில்லை .அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்த மாதிரியான சாமியார் நாய்களை விட்டு வைப்போமா? (எனக்கு போலி சாமியார் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை ,என்னை பொருத்தவரைக்கும் சாமியார் வேஷம் போடும் அனைவருமே போலியானவர்கள் தான்,இதில் எங்கிருந்து வந்தது போலி சாமியார் என்ற வார்த்தை? )

அன்றே சொன்னார் பெரியார் ,கடவுளை மற! மனிதனை நினை ! என்று ...அனால் நம்ம ஆட்கள் மனிதனை மறந்து விட்டு கடவுளை தான் சதா காலமும் நினைத்துக்கொண்டிருக்கிறான் .இன்று ஏதோ நித்யானந்தன் அகப்பட்டு கொண்டதால் மற்ற சாமியார்களெல்லாம் யோக்கின் என்று நாம் நினைத்துவிடக்கூடாது .இன்று இவன்! நாளை அவர்கள்!.நாம் முழித்துக்கொள்ளாவிட்டால் இது அப்படியே தொடரும்!.....

தமிழ்நாட்டில் நித்யானந்தன் ,ஆந்திராவில் கல்கி பகவான்(?) என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு சாமியார் கிழவன் தன்னுடைய ஆசிரமத்தில் ஆண்,பெண் அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக இருக்க வழிவகை செய்து கொடுத்து நாட்டை கெடுத்துவிட்டான்! என்று கைது செய்யப்பட்டிருக்கிறான் அவனுடைய ஆசிரமம் ஆந்திராவில் மக்களால் சூறையாடப்பட்டது .இங்கே தமிழ்நாட்டில் பரமஹம்ச நித்யானந்த சாமிகள் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலை என்று கேள்விப்பட்டவுடன் அவனுடைய ஆசிரமங்களை சூறையாடுகிறார்கள்,அவனுடைய சிலைகளை உடைக்கிறார்கள் (இவனுக்கு ஒரு ஊரில் சிலை வைத்திருக்கிறார்கள்,எங்கே போய் அடித்துக்கொள்வது  இந்த கொடுமைகளையெல்லாம்).இப்போது சிலை உடைத்தவன் ,ஆசிரமத்தினை சூரையாடினவர்களெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள் ? ,ஏதோ பொதுநலம் கருதி வந்து தகராறு செய்தவர்களா இவர்கள் ? .நிச்சயமாக இல்லை ,அவர்களெல்லாம் இவனை கடவுள் என்று நம்பி ஏமாந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்!! .இப்போது வரும் கோபம் யாருக்கு உதவும் ? ,எதற்கு உதவும்?. சிற்சில சேதாரங்களை ஏற்படுத்த மட்டுமே உதவும்.இது வெறும் தற்காலிக எதிர்ப்புதான் .ஆனால் நாளை வேறு யாரவது ஒருத்தன் இவனை விட திறமையாக ஏமாற்ற வந்தால் ஏமாற நாங்கள் தயார் என்பது போலதான் இருக்கிறது நம் மக்களின் நிலைமை .

யாராவது இனிமேல் இப்படிப்பட்ட சாமியார்களே! தமிழ்நாட்டில் உருவாகக்கூடாது ,அப்படி யாராவது வந்தால் அவர்களை கைது செய்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போராட தயாரா? இப்போது அகப்பட்டவனை கைது செய்ய கோரி போராட்டம் நடத்துகிறீர்கள்!!.சந்தோசம் அவனை கைது செய்த பிறகு என்ன ?...நாம் நம்முடைய வேலைபார்த்துக்கொண்டு கிளம்பிட வேண்டியதுதான்.எல்லாம் அடங்கிய  பிறகு மீண்டும் ஒருவன் முளைப்பான் ,சில அறிவு கெட்ட மக்கள் அவனிடம் போய் அருள் வாக்கு வாங்குகிறேன் என்று வயிற்றில் புள்ளியை  வாங்கி  விட்டு வந்து ..ஐயோ அம்மா என்னை  ஏமாத்திட்டான் ..இவன் பெரிய  போலி சாமி என்று கூப்பாடு போட்டு ஒப்பாரி வைப்பார்கள்.நான் ஏதோ அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதாக நினைக்காதீர்கள்! ..கடந்தகால தமிழக சாமியார்களின் வரலாற்றினை (?) எடுத்து பார்த்தால் உங்களுக்கே தெளிவாக தெரியும்.

எனக்கு இந்த தவறில் உடன்பட்டுள்ள நடிகையைப் பற்றி பேசுவதில் பெரிதும் உடன்பாடில்லை.ஏனென்றால் தினமலர் ஒரு உண்மையை வெளியே சொன்னதற்கே !!!!!! ,கூடிநின்று அந்த பெரிய பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் இன்றைய தமிழ் கதாநாயகர்கள்(?) .அதுவும் அன்றி பொதுவாகவே மக்களிடம் நடிகைகளைப் பற்றி ஒன்றும் பெரிதாக நல்ல மதிப்பீடு கிடையாது .எனவே நான் இதை உங்கள் விமர்சனத்துக்கே விட்டுவிடுகிறேன் .

அரசாங்கம் இந்த மாதிரியான குற்றங்களை தடுக்க இதுவரை எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை .காஞ்சி "காம"கோடிகள் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் நடிகை சொர்ணமால்யாவுடன் கூத்தடித்த போதே இந்த அரசாங்கம் இந்த மாதிரியான அசிங்கங்களை தடுக்க ஏதாவது செய்யும் என்று நினைத்தேன் .ஆனால் நமக்கு ஏமாற்றமே மிச்சம் .

இதோ இப்போது தன்னை பெரியாரின் வாரிசு ,அவரின் வழி நடக்கும் தொண்டன் ,தற்போது நடப்பது பெரியார் கண்ட ஆட்சி என்றெல்லாம் சொல்லும் மஞ்சள் துண்டு செம்மல் (இன்றும் அந்த மஞ்சள் ரகசியம் புரியாத புதிராகவே உள்ளது ) திரு.கருணாநிதி அவர்கள் ஏதாவது சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் சொன்ன பதில் ,

"’கோயில்கள் எல்லாம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறதே? ஆசிரமங்களில் எல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதே? ஏதேனும் நடவடிக்கை எடுக்கக்கூடாதா?’’என்று கேட்டதற்கு,

‘’இந்து அறநிலையத்துறையின் உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கும்’’என்று தெரிவித்தார்."


இது வெறும் பத்திரிகை பேட்டியாக இல்லாமல் இந்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மக்களும் இனிமேலும் ஆன்மிகம்,சாமியார்கள் என்று மூடநம்பிக்கையில் திளைக்காமல் மனித இனத்திற்கே உரிய பகுத்தறிவைக்கொண்டு சிந்திக்குமாறு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன்

இனிமேல் இப்படி ஒரு சம்பவமும்,அதைத் தொடர்ந்த இந்த மாதிரி கருத்து பகிர்வும் ஏற்படக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.


ஆசை நிறைவேறுமா? இல்லை பேராசையாகிவிடுமா? பார்க்கலாம் ?


இதையும் பாருங்க .....

http://www.maalaimalar.com/2010/03/03152851/sex.html

http://www.maalaimalar.com/2010/03/03150919/sex.html

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6659&id1=12



-சூரியன்

1 கருத்து:

Anand சொன்னது…

இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்