சனி, 13 பிப்ரவரி, 2010

3டி-யில் எந்திரன்?

ஜக்குபாய் உலக இணையத்தில் முதல் முதலாக வெளிவந்ததில் ஆடிப்போயிருக்கிறார்கள் திரையுலகினர். இதுபோன்ற இணைய கடத்தலுக்கு தனது படங்கள் ஆளாகிவிடக் கூடாது என்பதில் எல்லோரையும் விட உஷாராக இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இவரது எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்திருக்கும் ரெட்டச்சுழி படம் ஏற்கனவே முடிந்துவிட்டது. படத்தின் பாதுகாப்பு கருதி பர்ஸ்ட் காப்பியை அவர் லாக்க‌ரில் பாதுகாப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

அதேபோல் எந்திரனின் பாதுகாப்புக்கு இன்னொரு ஐடியா வைத்திருக்கிறார் ஷங்கர். அவதாரைப் போல் 3டி-யில் எடுத்தால் தியேட்ட‌ரில் வந்துதான் படத்தைப் பார்த்தாகணும். இந்த ஐடியாவுக்கு ஏற்படும் செலவைப் பொறுத்து எந்திரன் 3டி-க்கு மாற்றப்படும் என்கிறார்கள்.

இனி கதையை மட்டும் யோசித்தால் போதாது, பாதுகாப்பை பற்றியும் பாடம் படிக்கணும் போலிருக்கிறதே. 

கருத்துகள் இல்லை: