ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்களே!
அது போலத்தான் எனக்கு தோன்றியது ,
தமிழக முதல்வர்
முத்தமிழறிஞர்
வாழும் வள்ளுவர்
தன்மான சிங்கம்
குடும்பத்தலைவர்
திருமிகு
மானமிகு
மாண்புமிகு
கலைஞரின் இளைஞன் படத்தைப் பற்றிய கீழ்கண்ட விமர்சனத்தை பார்த்தவுடன்.
இதை விட பெரிய ஐஸ் கட்டியை தமிழ் நாட்டில், இந்தியாவில் அல்ல , உலகத்திலேயே யாராலும் வைக்க முடியாது என்பதால் நான் இத்துடன் இந்த படத்தின் விமர்சனத்தை முடித்துக்க் கொள்ளலாமென்று முடிவு செய்து விட்டேன்.
இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்று கோபத்துடன் என்னுடைய வலைப்பதிவை பார்க்க வந்தவர்களுக்கு இப்போது ஓரளவு ஆறுதல் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
யாரவது விமர்சனத்தை படித்து விட்டு வயிறு வலிக்க சிரித்து நோய்வாய் பட்டால் , கலைஞரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கான செலவையும் இளைஞன் திரைப்பட குழுவே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உடல் நிலை சரியானதும் இளைஞன் படத்தை திரையரங்கில் அமர்ந்து பார்க்க வேண்டுமாம்.
தைரியமிருந்தால் யாராவது முயற்சி செய்யுங்கள்.
தற்போது நான் Escapeeeee...
-சூரியன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக