வியாழன், 12 நவம்பர், 2009

ஒகேனக்கல் ரகளையான பயணம் - பாகம் 3


அப்பாடா !!!! ஒரு வழியாக ஒகேனக்கல் சென்று விட்டோம் .நாங்கள் ஏற்கனவே சென்று இருந்தபொழுது எங்களுக்கு பரிசல் ஒட்டி வந்தவரின் Visiting card - ஐ ( அதிர்ச்சி வேண்டாம் !! இங்கு பரிசல் ஒட்டுபவரிலிருந்து பொட்டி கடை வைத்திருப்பவர் வரை visitng card உடன் தான் சுற்றுகிறார்கள் )நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தோம் . ஒகேனக்கலுக்கு வண்டி சென்ற உடனே parking charge வசூலிப்பார்கள் . அங்கிருந்தே உங்களை மொய்க்க தொடங்கிவிடுவார்கள் ., வேறு யாருமில்லை அவர்கள் பரிசல் ஓட்டுபவர்கள் , மசாஜ் செய்பவர்கள் என நீளும் பட்டியல் ,இதில் மீன் வாங்கி கொடுத்தால் சமையல் செய்துதர கூட ஆளிருக்கு ( நீங்கள் வேறு எதற்காவது ஆள் எதிர்பார்த்தால் போக வேண்டிய blog வேற !!!!! :) :) :) )

நாங்கள் பார்க்க வேண்டிய நபரின் பெயர் பெருமாள் ,அவருக்கு call செய்து விட்டு சந்திக்க விழைகிறோம் .இருந்தாலும் மக்கள் எங்களை விட்டபாடில்லை .....எப்படியோ அவர்களை எல்லாம் சமாளித்து கொண்டு பெருமாளை பார்த்து விட்டோம் .அந்த திருப்பதி பெருமாள கூட easy ஆக பார்த்துடலாம் போலிருக்கு இந்த பெருமாள பார்க்க நாங்க ரொம்பவே சுத்தி விட்டோம் . எப்படியோ பெருமாளை பார்த்து என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்லி விட்டு ....... மீன் வாங்க புறப்பட்டோம் .

மீன்தானே வாங்க போறோம்னு தெரியாம எல்லா பைகளையும் தூக்கி கொண்டு கிளம்பினார்கள் ..என்னமோ சபரி மலைக்கு வந்த மாதிரி ஆளாளுக்கு ஒரு பை வைத்திருந்தோம் . இருந்தாலும் எங்கள் கூட்டத்திலேயே ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருக்கிற Mr.Omlet மட்டும் எந்த பை யும் தூக்காம எமாத்திகிட்டே வந்தான் . கடைசில சண்ட போட்டு ஒரு பெரிய பை தூக்க வச்சிட்டோம் . இப்படியே சண்ட போட்டுக்கிட்டு மீன் விற்கிற இடத்தை நோக்கி நடக்கும் போதே எங்கள் அணியின் Chinna Hulk க்குக்கு ஒரு ஆசை இப்போதே சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விட வேண்டுமென்று , நாங்களெல்லாம் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் வழக்கம் போல அடம் பிடித்து " கைபேசி ஓவி " யையும் கூட கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான் . ஆனா அவன் குளிக்க போறத விட ரொம்ப ஆர்வமா இருந்தது எங்களுக்கு முன்னாடி நடந்து சென்ற ஒரு பெண்ணை பார்க்கத்தான் :) :) :) . இது தெரிந்ததும் இன்னும் சிலர் அவனுடன் கிளம்பி விட்டனர் . நாங்கள் அந்த பைகளை காவல் காத்து கொண்டு மீன் வெட்டும் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம் ?? .

மீன் வெட்டி சமைக்கத்தயார் . அப்புறம் நாட்டுக்கோழி பிடிக்க போக வேண்டும் , ஆனால் குளிக்க செல்கிறோம் என்று போனவர்கள் ஆளையே காணவில்லை . போன் பண்ணாலும் யாரும் எடுக்கவில்லை . அடிக்கிற வெயிலுக்கு எங்களால் அங்கு நிற்கவே முடியவில்லை ( நாமெல்லாம் பெங்களூர் வாசியாச்சே, அதான் சைடுல இப்படி ஒரு பிட்டு :) :) :) )

ஒரு வழியாக காக்காய் குளியல் முடித்துவிட்டு , ஒரு படையாக வந்தார்கள் .... அப்புறம் அவர்களிடம் சில பல பைகளை கொடுத்துவிட்டு நடையை கட்டினோம் . நானும் சைதையும் கார் இருக்கும் இடம் வந்து சேர்ந்து திரும்பிபார்த்தால் HULK ..Chinna Hulk ,Ovi, Five ,Omlet யாரையுமே காணோம் .ஒரே காண்டா போச்சு ..சரி இதுக்கு மேல இவங்கல எங்கே தேடுவதுன்னு ...கார் பக்கத்திலேயே இருந்து விட்டோம் ....வந்தார்கள் 30 நிமிடம் கழித்து ஆடி அசைந்து வழியில் chinna hulk க்குக்கு ஒரு பெரிய சைஸ் ட்ரவுசர் வாங்கிகிட்டு ... !!!!!! .

இந்த நேரத்தில் சைதை நான் மசாஜ் செய்ய போறேன்னு ஒரு பிட்ட போட்டதும் நீ ..நானென்று ஒரே போட்டி ... கடைக்கு சென்றிருந்த எங்கள் அணியின் பெருசு களிடம் சென்று ஒரு நவரத்தினா ஆயில் வேண்டும் என்று சொன்னதும் அதெல்லாம் ஏற்கனவே வாங்கிட்டோம் என்று சொன்னார்கள் . பெருசு பெருசு தான்னு நாங்கள் அப்படியே ஒரே பெருமிதத்தில் !! திரும்பி நடந்தோம் .

ஓர் வழியாக கோழி, ( நாட்டு கோழி என்றது chinna hulk க்குக்கு ஒரே கொண்டாட்டம் ...உற்சாகத்தில் என்ன என்னமோ பேசினான் !!!. ) சமையல் சாமானெல்லாம் வாங்கிட்டு காருக்கு வந்தார்கள் . பரிசல் ஓட்டுனர் பெருமாள் அண்ணன் ஆட்டோ வோடு ரெடி யாக வந்து விட்டார் . என்னடா இவன் குழப்புறான்னு நினைக்க வேண்டாம் . நாங்கள் ஒகேனக்கல் Bus Stand லேர்ந்து ஒரு 10 Km காட்டுக்குள் சென்று அங்கிருந்து மீண்டும் Bus stand க்கு பரிசலில் வரணும் என்பதுதான் plan . இந்த ஐடியா நல்ல இருக்குதா ???

அப்படியே ..அற்றில் வரும் வழியில் ஒரு தீவில் இறங்கி குளிச்சிட்டு ,சமைச்சு சாப்பிட்டு விட்டு வருவதாக Plan பண்ணி கிளம்பினோம் !!! ..... :) :)
ஆனால் , எதையும் " பிளான் பண்ணி செய்யணும் ,பிளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான்னு " வடிவேலு சொல்ற மாறியே !!!!! ..எங்க எல்லாரையும் ஒரு விஷயம் சொல்ல வெச்சது ...
அப்படி என்ன விஷயம் அது ?????

- தொடரும் ..

கருத்துகள் இல்லை: