வியாழன், 10 டிசம்பர், 2009

தமிழ்சினிமா - ஒரு காப்பி களம் ( காப்பி-1)

அன்பான தோழர்களே !   

என்னுடைய வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் (அ) எழுந்திருக்கலாம் . என்னடா இவன் உலக நிகழ்வுகளையும் ,தமிழீழத்தையும் பற்றிய செய்திகளைப்பற்றி மட்டுமே பேசுகிறான் ,ஏதோ போனால் போகிறது என்று ஒரு திரைத்துளி போடுகிறான் .இவனுக்கும் சினிமாவுக்கும் வெகுதொலைவோ என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

இதோ நான் படித்த உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ,தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று நாம் கருதும் இருவரைப் பற்றிய பார்வையே இந்த பதிவு .

இதில் உள்ள எந்த ஒரு கருத்தும் என்னால் சொல்லப்பட்டதல்ல ,அதேபோல் என்னால் எந்த திருத்தமும் செய்யப்பட்டதல்ல .ஆனால்  என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

அதனால் ஒருவேளை இதில் குறிப்பிட்ட வைகளுள் உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருப்பின் உங்கள் விமர்சனங்களை வரவேற்று ,அதற்க்கு பதில் சொல்ல நானும் கடமைப்பட்டவனாய் இந்த கருத்துகளை பதிவு செய்கிறேன் ...

இதைப்படிக்கும் முன் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் இன்று தமிழ்சினிமாவில் நம்மால் மிகப்பெரிய திறமைசாலிகள் என்று புகழப்படுபவர்களில் பலர் (சிலரை தவிர) உலக சினிமாவை காப்பியடிப்பவர்கள்தான் . இந்த மாதிரி காப்பியடித்த கதை ,மன்னிக்கவும் கப்பியடித்தவர்களின் கதை நிறைய உண்டு .இருக்காதே பின்னே நம்ம தமிழ் சினிமாவுக்கு 75 வயசாச்சே!!!...

அப்படி காப்பியடித்து தற்போது பரபரப்பில் மட்டிக்கொண்டவரைபற்றித்தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம் .இவரிடமிருந்து இப்படி ஒரு செயலை இதுவரை எந்த தமிழ்சினிமா ரசிகனும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.என்ன செய்வது அவர் மானசீக குருவாக ஏற்றுகொண்டவரும் இதே காப்பி தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறார் .எது எப்படியோ நல்லா போய்கொண்டிருந்த அவர்கள் பிழைப்பு உலக சினிமாவை பார்க்கும் ரசிகர்களால் கப்பலேறியது என்னமோ நிதர்சனமான உண்மை .

இனி நான் படித்தவை உங்களுக்கு .....இனிமேலும் இது தொடரும் ........

சாரு,கமல்,அமீர்

சாரு ஒரு கோமாளி என்று குமுதம் விமர்சனம் செய்து இருக்கிறது.நான் எப்பொழுதாவது ஓசியில் குமுதம் படித்தாலும் முதலில் படிப்பது அரசு பதில்கள் தான்.இந்த விமர்சனத்திற்கு காரணம் இளையராஜா.இந்த மூன்று பேருமே எனக்கு பிடிப்பதால் அதில் எல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை மேலும் அந்த பதிலுக்கு சாருவே வெளுத்து வாங்கி இருப்பதால் ஓவர் டூ அமீர்.

என்னை பொறுத்த வரை சாரு ஒரு தீர்க்கதரிசி தான்.காரணம் இதோ..

பருத்தி வீரன் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை ஒரு எதிர்பார்ப்பும் இல்லை - யோகி அளவிற்கு.படம் வெளி வந்தப் பிறகு தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது.கமலில் ஆரம்பித்து சாதாரண கடைநிலை ரசிகன் வரை அமீருக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்கள்.அதில் கமல் கொடுத்த அங்கீகாரம் தமிழ் சினிவாவில் வந்த பதினேழு சிறந்த திரைக்கதையில் பருத்தி வீரனும் ஒன்று. (கொடுமையிலும் பெரிய கொடுமை அந்த வரிசையில் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் இருந்தது.)

கமல் அங்கீகாரம் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம்.அவர் கொடுத்த யோசனை தான் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு எமனாக வந்து நிற்கிறது யோகியின் வடிவில்.கமல் சொன்னது இது தான் அமீர் உலக சினிமா பாருங்கள் என்று சொன்னது தான்.அப்போது வேண்டாம் அந்த தவறை செய்து விடாதீர்கள் என்று அலறிய ஒரே ஒரு நபர் சாரு மட்டும் தான்.

கமல் நிகழ மறுத்த அற்புதம் என்று இந்தியா டூடேயில் வெளியான கட்டுரையில் கமலின் அவ்வை சண்முகி படம் ஒரு அப்பட்டமான தழுவல் என்று சொன்னார்.அதே மாதிரி தான் யோகி அது ஆப்பிரிக்க படத்தின் அப்பட்டமான தழுவல் என்று கூட சொல்ல மனம் வரவில்லை.அப்பட்டமான உருவல்.

சாரு அதே கட்டுரையில் அமீருக்கு உலக சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்.இப்போது அமீருக்கு உலக சினிமா தெரியும் - அதனால் தான் ஆப்பிரிக்கப் படத்தைத் திருடி அப்பிரிக்கப் படங்கள் கலந்து கொள்ளும் பிரிவில் துபாய் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கிறார்.(இப்படி செய்ய கமல் சொல்லி தந்து இருக்க மாட்டார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.அனுப்ப சொன்னவர் சுகாசினி மணிரத்னம்.ஆப்பு எங்கே தயார் ஆகுதுன்னே கண்டுப்பிடிக்க முடியவில்லை.)

அடுத்த வரியில் சாரு அமீருக்கு இலக்கியம் தெரியாது என்று ஆச்சர்யப்படுகிறார்.நல்லவேளை அமீருக்கு இலக்கியம் படியுங்கள் என்று யோசனை சொல்லவில்லை.நல்ல விதமாக இலக்கியம் தப்பி விட்டது.(இதில் சாரு மேல் எனக்கு வருத்தம் உண்டு.இலக்கியம் தெரியாதவரை வைத்து புத்தகம் வெளியிடுவதை விட இலக்கியத்தில் ஆர்வம் உள்ள வாசகர்களை வைத்து புத்தகம் அறிமுகம் செய்து இருக்கலாம்.இது சாரு அமீரின் பருத்திவீரனுக்கு கொடுத்த அங்கீகாரமா..)

கமலும்,மணிரத்னமும் தான் காப்பி அடிக்க சொல்லி தந்தார்கள் என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி என்னுடைய பதிவில் பின்னூட்டமாக எழுதி இருந்தான்.கமல் (காட் பாதர் - நாயகன் ) அதில் ஒரு நேர்த்தி இருந்தது.நேடிவிட்டி இருந்தது.தி ராக் என்ற படத்தை தான் உருவி தசாவதாரமாக எடுத்து இருந்தார் என்று நான் கத்தியது என் காதிலே விழவில்லை.காரணம் கமல் என்ற மந்திரம்.அவர் படத்தில் தெரியும் இசம்,ரசம் எல்லாம் தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கமல் ஒரு பார்பினீயவாதி.இந்துத்துவா தீவிரவாதி என்று தான் அடிப்பார்களே தவிர அவர் எந்த படத்தில் இருந்து தழுவினார் என்று யாரும் கண்டுக் கொள்ளவதில்லை.

மணிரத்னம் காட்பாதர் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படத்தை எடுத்த  (தழுவி) நாயகன் டைம்ஸ் பத்திரிக்கையின் முதல் நூறு படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த இடத்தில் தான் வசந்தபாலனை உதாரணம் காட்ட வேண்டும்.சினிமா பேரடைஸோ தான் வெயில்.அந்த கதைக்குள் அழகாக பசுபதியைக் கொண்டு நிரப்பினார்.உடனே பசுபதிக்கு நான் தானே நடிக்க சொல்லி குடுத்தேன் என்று அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்யவில்லை.

ட்ரைலர் பார்த்து அனுமானத்தில் அமீரின் நடிப்பை விமர்சனம் செய்தேன் என்று கடும் கண்டனம் வந்தது.இதற்கும் சாரு பாணியில் தான் பதில் சொல்வேன்.இருபது வருடம் சினிமா பார்த்தே வளரும் ஒருவனால் ட்ரைலர் பார்த்து மிக சரியாக முடிவு செய்ய முடியும் அதற்கு உதாரணம் தான் அமீரின் நடிப்பு.

இந்த பதிவை அரைவேக்காடு என்றோ அறிவுஜீவி என்றோ இல்லை கோமாளி என்றோ சொல்லலாம்.

டிஸ்கி :

தொடரும் - விமர்சங்கள் மட்டும் அல்ல இந்த பதிவும் தான்.இரண்டாவது பாகம் விரைவில்..

சாரு பேச்சைக் கேட்காமல் கமல் பேச்சைக் கேட்டு எங்க உயிரை வாங்கிடீங்களே அமீர்.இது நியாயமா..கண்ணபிரான் எந்த படத்தின் காப்பி - இது நான் கேட்கவில்லை குசும்பன் கேட்டார் ஆதியின் பதிவில்.எனக்கும் அதே சந்தேகம் தான்.

காப்பி தொடரும் ......

நன்றி : இரும்புத்திரை

5 கருத்துகள்:

NightFox சொன்னது…

When Speaking about the coping in Tamil Cinema from the World Over...Why don't you start just from South India....i.e.,Telugu Industry..Mr..Manbumigu Ilaiya thalapathy Vijay...avargal...kappy allaaa...EEE adichan...Copy(DIPPU)adikurare ithu avaruke adukuma????

Sooriyan சொன்னது…

தம்பி சரண் ,

அடுத்தவர்களின் கதையை காசு கொடுத்து வாங்கி படமா எடுப்பவர்களுக்கும் , திருடி படமா எடுப்பவர்களுக்கும் நீ வித்தியாசத்தை புரிந்து கொள்ளவேண்டும் . இதில் நான் சொன்னது இரண்டாவது வகை .நீ கவலைப்படுவதோ முதல்வகையைப்பற்றி .

Deva...... சொன்னது…

Unga Blogspotya oru Kapi Kalm.....

Sooriyan சொன்னது…

டேய் ஓலு,

நான் படித்து ரசித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் ,என்னுடைய வலைதளத்தில் நான் தகவல் பெற்றவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பதிவு செய்கிறேன் . இதுவும் ஒரு வகையில் Remake போலத்தான் .ஆனால் நீ செய்வது அருமையான மணம் கொண்ட Bru Copy டா.

Deva...... சொன்னது…

Ninga enna than sonnalum kapi kapi thaan........


Yeppadiku,

...............?