புதன், 9 டிசம்பர், 2009

"தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது...?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பேராசிரியர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பணியில் முதல் கட்டமாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாடத்திட்டம் குறித்த முன் வரைவினை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் பற்றிய பாடம் இருக்கக்கூடாது என்று கூச்சல் போடத் துவங்கியுள்ளார்.


மேலும் மறுமலர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் மூட நம்பிக்கை எதிர்ப்பு பற்றிய பாடங்கள் இருக்கக்கூடாது என்றும், இவையெல்லாம் இந்து விரோத நடவடிக்கைகள் என்றும் குற்றம் சாட்டியுள் ளார்.சமச்சீர் கல்விப் பாடங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இராமகோபாலனின் இத்தகைய மத அடிப்படைவாத மிரட்டல்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

விழிப்புணர்வுக் கருத்துக்கள் இந்து விரோதக் கருத்தென்று இவர் கூறுவதன் மூலம், இந்துக்களைக் கேவலப்படுத்தி யுள்ளார். இவருடைய மூடப்பழக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை இந்துக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது? இஸ்லாமியர் பற்றியும், கிறிஸ்தவர் பற்றியும் பாடத்தில் வரவே கூடாது என்று கூறும் துணிச்சல் இந்த நபருக்கு எங்கிருந்து வந்தது?

இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் இந்திய வர லாற்றில் இடமே இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?வர்ணாசிரமக் கல்வி என்ற பேரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம்,

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்து வந்த அதே குரல்தான்,

இன்று இராமகோபாலன் வடிவில் வந்து நிற்கிறது. இந்த விஷவித்தை தமிழ் மண்ணில் ஊன்ற நாம் அனுமதிக் கக்கூடாது.

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழும் அனைத்துப் பகுதி மக்களும், சகல பகுதி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்களும் ஒரே குரலில் உறுதியுடன் இதை எதிர்த்து நிற்க வருமாறு தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

ஏதாவது ஒரு குற்றம் சொல்லி, எந்த வகையிலேனும் சமச் சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்கிற அர சியலும் இக்குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.

தமிழகத் தில் எடுபடாமல் போன ரத்தக்கறை படிந்த தங்கள் இந்துத் துவா நிகழ்ச்சி நிரலை, இப்பிரச்சனையைப் பெரிதாக்குவதன் மூலம் முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் இதைப்பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுக்கும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழர் கல்வி உரிமைக்கு எதிரான இராமகோபாலனின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட தமுஎகச தயாராக இருக்கிறது.

இத்தகைய மத அடிப்படைவாதிகளின் குரலுக்குச் செவி சாய்க்காமல் அரசியல் உறுதியுடன் நின்று சமச்சீர் கல்வியை மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் கூடிய பாடத்திட்டத் துடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: