புதன், 16 டிசம்பர், 2009

‘அரக்கன் வந்தான்… ஆரம்பித்தது அழிவு!’


‘அரக்கன் வந்தான்… ஆந்திரத்தில் பேரழிவு தொடங்கிவிட்டது!’ – வைணவத் துறவியின் வாக்கு

ராஜபக்சே இரண்டு முறை திருப்பதி வந்தார். அவர் கால்பட்டதால்தான் ஆந்திராவுக்கே அழிவுகாலம் வந்துவிட்டது என வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தன் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட விரும்பாத அந்தத் துறவி மேலும் கூறுகையில், ராஜபக்சே ஒரு மனித அரக்கன். பஞ்சமா பாதகங்களைச் செய்துவிட்டு ஒன்றும் தெரியஆதவர் போல் நடிக்கிறார்.

உலகின் கொடும் அரக்கன் என்றால் சந்தேகமில்லாமல் இந்த ராஜபக்சேதான்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் ராஜபக்சே! இந்த அரக்கனுக்கு உதவி செய்தவை இந்திய பார்ப்பனியமும், அமெரிக்க மற்றும் சீன அரசுகளும்தான்.

இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார் ராஜபக்சே.

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்தபோது அவர் முதல் முறை திருப்பதி வந்தார். அப்போது, மக்கள் தலைவராகத் திகழ்ந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார்.

இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் இந்த கொடுங்கோலன். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலமே.

ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டம் நடந்தது கிடையாது. தெய்வம் நின்றல்ல… அன்றே கொல்லும் வலிமை படைத்தது. ராஜபக்சேவை கோயிலுக்குள் நுழையாதே என்று தெய்வம் சொல்லவில்லை… ஆனால் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உள்ளே அமர வைத்த ஆந்திரத்தை தண்டிக்கிறது இன்று. இந்த தெய்வத்தின் உண்மையான பக்தர்கள் லட்சக்கணக்கில், வரிசையில் காத்திருக்க, சம்பந்தமே இல்லாத இந்த அரக்கனை முதல் மரியாதை தந்து சந்நிதானத்தில் அமர வைத்த கொடுமையை தெய்வம் எப்படிப் பொறுக்கும். இதைச் செய்த அந்த பூசாரிகளுக்கும் அழிவுகாலம் காத்திருக்கிறது.

தமிழர்களின் எல்லை தெய்வம் திருப்பதி ஏழுமலையான். தன் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை திருப்பதி ஏழுமலையானாலேயே பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதற்கு எதிர்வினை காட்டுகிறார் இன்று.

இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள்? இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது.

ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை. இன்னும் என்னென்ன நடக்குமோ.

எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த ராஜபக்‌ஷே நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க தக்க பரிகார பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட வேண்டும். இல்லை என்றால் ஆந்திர தேசத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அவலமும் அழிவும் ஏற்படும்.

எனவே உண்மையான வைணவர்களும், ஏழுமலையான பக்தர்களும் துரிதமாக செயற்பட்டு திருப்பதி கோவிலில் தீட்டுக் கழிக்கும் பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்… அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கும் உரிய பரிகாரத்தை இலங்கை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா இனியாவது செயல்பட வேண்டும்” என அந்த வைணவத் துறவி கேட்டுக்கொண்டார்.

இந்தத் துறவியின் கூற்றில் பகுத்தறிவு உள்ளதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும்… திருவிழா, பண்டிகை போன்றவற்றை நாம் கொண்டாடுவதே கூட, அதன் பெயரால் சில நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கில்தான் என்பார்கள் பெரியவர்கள். கடவுளின் மீதுள்ள பயமாவது ராஜபக்ச மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அல்லது கடவுளையே இவர்கள் மாற்றிவிடுவார்களா? பார்க்கலாம்!

மற்றபடி தனக்கு சாதகமான விஷயங்களை எங்கிருந்து வந்தாலும் ஏற்கும் பாமர மனநிலையிலேயே இதை எடுத்துக் கொள்ளவும்!

நன்றி : என்வழி 

கருத்துகள் இல்லை: