புதன், 16 டிசம்பர், 2009

பிரபாகரன் மகள் சித்திரவதை செய்து படுகொலை?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் எனக் கூறி சில படங்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண கோலத்தி்ல உடல் உள்ளதால் அவர் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


ஈழப் போரின் கடைசி கட்டத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சில வெளி சக்திகளின் அறிவுரையின் பேரில், கேபி உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின் பேரில் இவர்கள் சரணடைந்தனர். அவர்களில் துவாரகாவும் ஒருவர் எனத் தெரிகிறது.

இந் நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பிரபாகரனின் மகள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் இந்தப் பெண்ணின் உடல் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டது போலத் தெரிகிறது. நிர்வாண கோலத்தில் உடல் உள்ளது. எனவே ராணுவத்தினரால் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் மரணம் மட்டுமே புலிகள் இயக்கத்தினரால் உறுதி செய்ய்பட்டுள்ளது. பிரபாகரன் [^], அவரது மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், துவாரகா ஆகியோர் குறித்து தெளிவான தகவல்கள் யாரிடமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திரனின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில படங்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை ராணுவத்தினர் எந்த அளவுக்குக் கொடூரமாக, ஐ.நா. போர் நிறுத்த ஜெனீவா உடன்படிக்கையை மீறி வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதாக ஈழத் தமிழர் இணையங்கள் கூறியுள்ளன.

சரணடைய வந்த புலிகள் தலைவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார் என்று சில தினங்களுக்கு முன்பு பொன்சேகா கூறியிருந்தார். ஆனால் சிங்களர்கள் மத்தியில், நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கொதிப்பு கிளம்பியதால் நான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

கொல்லப்பட்ட இந்தப் பெண் துவாரகாவோ இல்லையோ, ஒரு பெண் மிகக் கொடூரமான பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்ட்டிருக்கிறார். அதைச் செய்தது இலங்கை ராணுவம் என்ற உண்மை மட்டுமே இப்போதைக்கு தெளிவாகத் தெரியும் உண்மையாகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை: