திங்கள், 21 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் - திரைவிமர்சனம்

 
வேட்டைக்காரன்! விஜய் படம் என்பதற்காகவே அதை எதிர்க்கும் நண்பர்களுக்கிடையே நான் இந்த படத்தை சென்று பார்த்தேன்.(கூடவே உலக சினிமாவை மட்டுமே பார்க்கும் அறிவு ஜீவிகளுடன்??!!!).சும்மா சொல்லக்கூடாது தியேட்டர் சென்றவுடன் தமிழ்நாடா,கர்நாடகாவா என்றே குழம்பும் அளவுக்கு பேனர்கள் ,கட்அவுட்டுகள் ,தோரணங்கள் என்று களைகட்டியிருந்தது .என்னுடன் வந்த ஒருவன் டேய்! கர்நாடகாவுல விஜய்க்கு இவ்ளோ ரசிகர்களா என்று வியக்கும் அளவுக்கு இருந்தது தியேட்டரில் கூட்டமும் .

நாங்கள் முன்கூட்டியே சென்றதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் டிக்கெட் எடுத்து கியூவில் நின்றோம் .தியேட்டருக்கு போகும் போதுதான் சிலபல வேலைகள்  செய்யவேண்டும் என்று எங்கள் கூட்டத்தில் ஒருவர் இருக்கிறார்.அவரால் நங்கள் கொஞ்சம் படபடப்பாக வேண்டியதாயிற்று. அப்பாடா ஒருவழியாக உள்ளே போய் நல்ல சீட்டாக பார்த்து உட்கார்ந்தாச்சு.

வேட்டைக்காரன் கதை :

தூத்துக்குடியில் +2  நான்காவது முறையாக எழுதி ரிசல்ட் க்காக  வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் ரவி (இல்லை இல்லை போலீஸ் ரவி ,இதுதான் படத்தில் ஹீரோவோட பேரு ) ஊரில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்டுக்கொண்டு  ஒரு போலிசாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் .இவனுடைய லட்சியமெல்லாம் Encounter specialist  தேவராஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி ) மாதிரியே பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் . அவருக்காக ஊர் நடுவில் பெரிய கட்அவுட்டு வைக்கிற அளவுக்கு பெரிய விசிறி . 

இப்படியே போய்கொண்டிருக்கிற போலீஸ் ரவி வாழ்கையில் திடீரென்று ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது .அது அவரு +2  பாஸ் பண்றதுதான் .அப்புறம் ஒரு வழியாக தேவராஜ் படிச்ச அதே காலேஜ்ல சீட் வாங்கி  சேர்கிறார்  விஜய்.முதல் நாளே தன் சக மாணவிக்கு நேரும் அவமானத்திற்கு பதில் தீர்த்து மாணவர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கும் விஜய் ,அப்படியே அந்த மாணவியை தன்னுடைய தோழி ஆக்கிகொள்கிறார்.  அவள் மூலமாகவே தேவராஜ்போல் தானும் ஆட்டோ ஒட்டி சம்பாதித்துதான்  படிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக்கொள்கிறார்.

ஹீரோ சிட்டிக்கு வந்தாச்சே !! இப்போ வில்லன் என்ட்ரி அகனுமே ? வருகிறார் சாய்குமார் வித்தியாசமான கெட் டப்பில் .அவருக்கு அழகான பெண்களை பார்த்தவுடனே படுக்கைக்கு  அழைக்கும் ( கடத்தி செல்லும் )  குணம். அதை நிறைவேற்றுவதற்காகவே கூட 5 அல்லக்கைகள் .தன் தோழி மீது  அதே வில்லனின் கடைக்கண் பார்வை விழ !!! ஹீரோ வில்லனுடன் மோதுகிறார் ,அவரை அடித்து வீழ்த்தி ஆஸ்பத்திரியில் படுக்க வைக்கிறார் ,கூடவே அவருக்கு இருந்த Image ஐ யும் உடைக்கிறார். இப்போ போலீஸ் வந்து வில்லனை பிடிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால்  தவறு,அவர்கள் விஜய்ஐ சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார்கள்.ஒரு கட்டத்தில் பொங்கி எழும் ஹீரோ சிறையை உடைத்து வெளியில் வர பெரிய Polica force வந்து அவரை மடக்கி பிடித்து மறுபடியும் சிறையில் அடிக்கிறார்கள் .மேலும் பழைய வெடிகுண்டு கேஸில் விஜய் பெயரையும் சேர்த்து Encounter  la போட்டு தள்ள காட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ,அங்கிருந்து  தப்பிக்கும் விஜய் ஆற்றின்  முடிவான அருவியில் இருந்து குதித்து சின்ன முழங்கால் காயத்தோடு தப்பிக்கிறார்!!!! ????? .

தப்பித்த விஜய் நேராக பெரிய வில்லன் சலீம் கௌஸ் முன்னாள் போய் நிற்க அவர் விஜயை கூட்டிக்கொண்டு தன்னுடை ஒரு நாள் வேலையை விளக்குகிறார் ( பயம் காட்றாராமாம்). இதன் மூலம் எதிரியின் கோட்டையை புரிந்து கொள்ளும் விஜய் அவனை அழிக்க தானும் ரவுடி ஆகிறார் ( புலி உறுமுது  பாடல் ஒலிக்க). எப்படி அவர் வில்லனை அழிக்கிறார் ,தன்னுடைய நிஜ ஹீரோ தேவராஜை பார்த்தாரா இல்லை அவர் என்ன ஆனார் என்பதுடன் படம் முடிவடைகிறது இடை இடையே காதல்,காமெடி காட்சிகளுடன் .

விமர்சனம் :   

இதற்க்கு முன் வந்த படங்களை விட இந்த படத்தில் விஜயின் அறிமுக காட்சியில் அடக்கி வாசித்திருக்கிறார்கள் .Opening song ல் விஜயுடைய பையன் வந்து ஆடுவது  கலகலப்பு ,விஜய்க்கு இவ்வளவு  பெரிய மகனா என்று தியேட்டரில் பெரும்பாலனோர்  சலசலத்தது கேட்கமுடிந்தது. ஊரில் செய்யும் கலாட்டா அதை தொடர்ந்து சென்னைக்கு கிளம்புவது வரை ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போலவே இருந்தது பலவீனம் .ரயில்வே ஸ்டேஷன் ல அனுஷ்காவை பார்த்ததும் விஜய்யும் சத்யனும் செய்யும்  காமெடி கலாட்டா தூள் .


சென்னை வந்ததும் ஸ்ரீஹரியை போய் பார்க்கும் விஜய் அவர் ஊரில் இல்லை என்றதும் எங்கு தங்குகிறார் என்பதெற்கெல்லாம் விடை இல்லை .விஜய்யும் ,அனுஷ்காவின் பாட்டி சுகுமாரியும் சேர்ந்து செய்யும்  காமெடி கலாட்டவில் தியேட்டரே கல கல . ஸ்ரீநாத் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று வந்து உண்மைலேயே காமெடி பீஸாகி போகிறார். வடிவேல் ,விவேக்,சந்தானம் போன்ற காமெடியன்களின் உதவி இல்லாமல் கதையோடு விஜய் செய்யும் காமெடிகள் ரசிக்க தக்கவை . ஒரு மசாலா படத்திலேயே இவ்வளவு செய்ய முடிகிற விஜய், கமல் போல ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம் . 

சண்டைக்காட்சிகள் அனைத்தும் அனல்பறக்க உள்ளது ,அனால் வில்லனின் அடியாட்களுடன் விஜய் பின்னால் பறப்பது எல்லாம் டூமச் .அதை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வில்லன் கதாபாத்திர  வடிவமைப்பில் ஏதும் புதுமை இல்லை,அதே காட்டு கத்தல் தான் . சலீம் கௌஸ் -ன் நடிப்பு அருமை ,அதுவும் கிளைமாக்ஸ்ல் அவர் பேசும் வசனமும் ,அந்த தொனியும் சூப்பர்.

அனுஷ்கா - ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை தெரிந்து நடித்திருக்கிறார் .மற்றபடி வழக்கம் போல விஜய் பட நாயகியாக வந்து அவரை காதல் செய்வதைத்தவிர யான் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று சொல்லி செல்கிறார். சத்யன் இந்த படத்தில் ஹீரோ friend என்கிற அந்தஸ்துக்கு  உயர்ந்திருக்கிறார், இதே போல் வாய்ப்புகளை செலக்ட் செய்து நடித்தால் அவருக்கு பெரிய எதிர்காலமுண்டு .
  
தில்,தூள்,திருப்பாச்சி,பகவதி படங்களின் பாதிப்பு அங்கங்கே தென்படுவதை தவிர்க்கமுடியவில்லை .ஒருவேளை டைரக்டர் இந்த படத்தை எப்படியாவது ஹிட்டாக்கியே தீரவேண்டுமென்று இப்படிசெய்துவிட்டாரோ என்னவோ.ஆனால் படத்தில் Director Touch என்ற வார்த்தைக்கு ஒரே காட்சி கூட இல்லை ,இயக்குனர் முழுக்க முழுக்க விஜய் என்ற தனிமனிதனை நம்பி களத்தில் இறங்கியிருப்பது படம் பார்க்கும் கடைசி ரசிகனுக்கு கூட கண்கூடாக  தெரிகிறது .சத்யன் கொலைக்கு பழிவாங்க விஜய் செய்யும் செயல்கள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடுவதால் ,என்ன நடக்கிறது என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை .சாய்குமாரை கொலை செய்ய காரை தண்ணியில் தள்ளி remote மூலம் Door lock செய்வதெல்லாம் ரசிக்கும்படி இருந்தது .
பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம் ( ஒரே ஒரு டயலாக் " சாமிகிட்ட மட்டும்தான்" தவிர) .உபயம்: சன் பிக்சர்ஸ்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன  .புலி உறுமுது பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை. மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை .பின்னணி இசையில் ஒன்றும் புதிதாக சொல்வதற்கில்லை ,விஜய் அந்தோனி இன்னும் கொஞ்சம் நன்றாக முயற்சித்திருக்கலாம்  .ஒளிப்பதிவு -கோபிநாத் பாடல் காட்சிகளை தவிர மற்ற எதிலும் அவர் சாதிக்கவில்லை. படத்தொகுப்பு -V.T.விஜயன் ,பாடல்கள் அனைத்தும் திடீரென்று முடிந்து காட்சிகள் தொடர்வது சற்று கடினமாக உள்ளது ,இன்னும் Soft Editing செய்திருக்கலாம் .விஜயிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் டான்ஸ் இந்த படத்தில் குறைவு.சொல்லிக் கொள்கிற  அளவுக்கு விஜய்க்கு இந்த படத்தில் Dance movements இல்லை (உச்சி மண்டை பாடலில் வரும் தலைகீழ் நடனம் தவிர )என்பது  ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் .கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் சார்பாக ஒரே வேண்டுகோள் ..இந்த படம் ஓடுகிறது என்பதற்காக மீண்டும் இதே போல் நடிக்காமல் atleast கதையாவது புதுசா தேர்ந்தெடுத்து நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

3 மணிநேரத்திரைப்படம் ,போரடிக்காமல் செல்கிறது...காமெடி,காதல் என்று முதல் பாதி அருமை . வழக்கம் போல அடிதடி ,பழிவாங்கல் என்று இரண்டாம் பாதி.

விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி ,மற்றவர்களுக்கு ஓகே ரகம்.

வேட்டைக்காரன் - ரசிகர்களை வேட்டையாடாதவன்.

-சூரியன்

2 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

\\சத்யன் இந்த படத்தில் ஹீரோ friend என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார், இதே போல் வாய்ப்புகளை செலக்ட் செய்து நடித்தால் அவருக்கு பெரிய எதிர்காலமுண்டு .

பார்த்து விஜய், அடுத்த படத்துல சத்யன்கூட ஹீரோ friend என்கிற அளவுக்கு வந்திடபோறீங்க...

Sakthi Doss சொன்னது…

வேட்டைக்காரன் படம் ரிலீசான பின்னரும் அதைப் பற்றி வெளிவரும் கதைகளுக்கு பஞ்சமில்லை.

இன்று வெளியாகியுள்ள, சற்றே லாஜிக் உள்ள ஒரு 'கதை' இது...

வேட்டைக்காரன் படம் ஒரு மாதத்தையாவது முழுசாகத் தாண்டுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளதாம் இப்போது.

ஒரு பக்கம் படம் படு சூப்பர் என்று விஜய் யும் அவரது தந்தையும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம், பொங்கலோடு இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டுத் தூக்கும் முடிவில் தீவிரமாக உள்ளது சன் பிக்சர்ஸ் என்கிறார்கள்.

பொங்கலுக்குப் பிறகு?...

வருகிற தைத்திருநாளையொட்டி சன் நிறுவனத்தி்ன் இரண்டு புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளனவாம்.

இந்தப் படங்கள் வெளியாகும்போது வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களைத்தான் பிரித்துக் கொடுக்கப் போகிறார்களாம்.

இதனால் இப்போது 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ள வேட்டைக்காரன் படம், 50 நாட்களைக் கூட தாண்ட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

கடைசியில் அயனாவரம் கோபிகிருஷ்ணாவில் போட்டுத்தான் இந்தப் படத்தை 100 நாள் கணக்கு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம் விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏசியும்.

வெளிப்படையாக பூங்கொத்து கொடுத்தாலும், உள்ளுக்குள் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருக்கிறது என்கிறது விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம்.

நன்றி தட்ஸ்தமிழ்